Kerala Rape Attempt, Horrific Incident: கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள முக்கம் நகரில் பெரும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்தேறி உள்ளது. அங்குள்ள சிறிய அளவிலான ஹோட்டல் ஒன்றில் பணியாற்றும் பெண் ஒருவர், பாலியல் வன்புணர்வு முயற்சியில் இருந்து தப்பிக்கும் விதமாக ஹோட்டல் கட்டடத்தின் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்த சம்பவம்தான் கேரளாவையே தற்போது அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இந்த சம்பவம் கடந்த பிப். 1ஆம் தேதி நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் மொத்தம் 3 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவரை மட்டுமே போலீசார் கைது செய்துள்ள நிலையில், இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தின் வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Kerala Rape Attempt: மாடியில் இருந்து குதித்த பெண்
கேரளாவின் கோழிக்கோட்டின் முக்கோம் பகுதியில் தேவதாஸ் என்பவர் நடத்தி வரும் ஹோட்டலில்தான் அந்த 24 வயது பெண் பணியாற்றி வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று அந்த பெண் ஹோட்டல் ஊழியர்கள் தங்கும் அறையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஹோட்டல் உரிமையாளர் தேவதாஸ், ஹோட்டலில் பணியாற்றும் ரியாஸ் மற்றும் சுரேஷ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயற்சித்துள்ளனர்.
மேலும் படிக்க | டெல்லியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? மக்களின் தீர்ப்பு இதுதானா?
Kerala Rape Attempt: ICU-வில் பாதிக்கப்பட்ட பெண்
அந்த பெண், பாலியல் வன்புணர்வு முயற்சியில் இருந்து தப்பிக்கவே அந்த ஹோட்டல் கட்டடத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். தொடர்ந்து, கீழ் இருந்து மக்கள் சத்தம் போடவே, அந்த 3 குற்றவாளிகளும் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றனர். தற்போது அவர் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள எலும்பியல் துறையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பெண் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்ததில் இடுப்புப் பகுதி, முதுகுத்தண்டு உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
Kerala Rape Attempt: வீடியோ பதிவானது எப்படி?
அந்த பெண் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார், இவர் கோழிக்கோட்டில் உள்ள அந்த புதிதாக தொடங்கிய ஹோட்டலில் பணிபுரிவதற்காக அங்கு வந்து தங்கி உள்ளார். மேலும், இந்த சம்பவம் நடக்கும் முன் அந்த பெண் மொபைலில் கேம் விளையாடி வந்துள்ளார். அப்போது, திடீரென குற்றவாளிகள் அவரை நெருங்கியபோது மொபைலின் கேமரா தவறுதலாக செயல்பட தொடங்கி, அதனை பதிவு செய்ய தொடங்கியது.
Kerala Rape Attempt: ஹோட்டல் உரிமையாளர் கைது
தன்னை விட்டுவிடும்படி குற்றவாளிகளிடம் அந்த பெண் கதறுவது மொபைலில் பதிவாகி உள்ளது. இதன் வீடியோவே தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. தற்போது, இந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மகளிர் நல ஆணையம், கோழிக்கோடு ரூரல் காவல் கண்காணிப்பாளர் கே.இ. பைஜூவிற்கு உத்தரவிட்டுள்ளது. இதன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று குற்றவாளிகளுள் ஒருவரான ஹோட்டல் உரிமையாளர் தேவதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். ரியாஸ் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க | டெல்லி தேர்தல் 2025: தொகுதி வாரியாக அனைத்து கட்சி வேட்பாளர்களின் முழு பட்டியல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ