Jailer 2 Movie Villain : 2023ஆம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் ஹிட் அடித்த படம் ஜெயிலர். இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். இதன் 2ஆம் பாகம் தற்போது உருவாக இருக்கிறது. இந்த படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது.
ஜெயிலர் 2 அறிவிப்பு:
ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில், நெல்சன் திலீப்குமார் முதன்முறையாக அவருடன் கைக்கோர்த்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்திருந்தது. மோகன் லால், சிவராஜ் குமார், டைகர் ஷ்ராஃப் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம், 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரிய ஹிட் அடித்தது.
சில நாட்களுக்கு முன்பு ஜெயிலர் 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதில் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தும் இயக்குநர் நெல்சனும் நடித்திருந்தனர். ரத்தக்களறியில் பார்க்கவே பயங்கரமாக இருந்த இந்த க்ளிம்ஸை பார்த்ததில் இருந்து ரசிகர்களுக்கு இப்படம் மீதிருந்த எதிர்பார்ப்பு பெரிதாக எகிறியது.
வில்லன் யார்?
ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் வசந்த் ரவி, ஜி.மாரிமுத்து உள்ளிட்டோர்ர் சைலண்ட் வில்லன்களாக நடித்திருந்தனர். மெயின் வில்லனாக வர்மன் என்ற கதாப்பாத்திரத்தில் வினாயகன் நடித்திருந்தார். இந்த படத்தின் இறுதியில் அவரை ரஜினி கொன்று விடுவது பாேல காட்சிப்படுத்த பட்டிருக்கும். இதனால், இவர் அடுத்த பாகத்தில் வில்லனாக தொடர மாட்டார் என்பது கன்ஃபாரம் செய்யப்பட்டது.
தற்போது, ஜெயிலர் 2 திரைப்படத்தின் வில்லன் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இதில், எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் தொடர்ந்து வில்லனாக நடித்து வரும் இவர் சமீபத்தில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். தற்போது இவரை வில்லனாக நடிக்க வைக்க நெல்சன் திலீப்குமார் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அப்படி எஸ்.ஜே.சூர்யாவை வில்லனாக நடிக்க முடியவில்லை என்றால், இன்னொரு ஆப்ஷனையும் நெல்சன் திலீப் குமார் கைகளில் வைத்திருக்கிறார்.அந்த நடிகர் செம்பியன் வினோத் ஜோஸ். மலையாள நடிகரான இவர் தமிழில் பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். குறிப்பாக 2022வில் வெளியான விக்ரம் படத்தில் வில்லன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இதனால், இவரது கதாப்பாத்திரம் பெரிதாக பேசப்பட்டது. இவர்கள் இருவரில் யார் வேண்டுமானாலும் வில்லனாக நடிக்கலாம் எனக்கூறப்படுகிறது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள், இவர்கள் இருவருமே எதிர்பார்க்காத வில்லன்கள்தான் என கூறி வருகின்றனர்.
இந்த படத்திற்கு பிறகு பிரேக்-ஆ?
நடிகர் ரஜனிகாந்த், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகுதான் அவர் ஜெயிலர் 2 படத்தில் இணைய இருக்கிறார். இதற்கு பிறகு அவர் எந்த படத்தில் இணைய இருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால், இவர் ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு பிரேக் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க | ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் பிரபல நடிகை!! ரஜினியை விட 40 வயது இளையவர்..
மேலும் படிக்க | ஜெயிலர் 2: ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் தனுஷ்!! Ex மாமனாரை எப்படி எதிர்கொள்வார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ