Immunity-ஐ அள்ளிக் கொடுக்கும் வேம்பும் கற்றாழையும்..!!!

கொரோனா காலத்தில் மிகவும் தேவைப்படும் எதிர்ப்பு சக்தியை வேம்பு மற்றும் கற்றாழையிலிருந்து பெறலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 13, 2020, 09:47 PM IST
  • கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை.
  • கொரோனாவின் காலத்தில், நீங்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருப்பது அவசியம்.
  • கொரோனா காலத்தில் மிகவும் தேவைப்படும் எதிர்ப்பு சக்தியை வேம்பு மற்றும் கற்றாழையிலிருந்து பெறலாம்.
Immunity-ஐ அள்ளிக் கொடுக்கும் வேம்பும் கற்றாழையும்..!!! title=

கொரோனா காலத்தில் மிகவும் தேவைப்படும் எதிர்ப்பு சக்தியை வேம்பு மற்றும் கற்றாழையிலிருந்து பெறலாம். இதிலிருந்து தயாரிக்கப்படும் ஜூஸ்கள் சிறப்பு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதோடு, கூடுதலாக எடையையும் குறைக்கிறது.

 கிட்ட தட்ட அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. ஆனால், கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. கொரோனாவின் காலத்தில், நீங்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி  நன்றாக இருப்பது அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை பெற நீங்கள் கற்றாழை மற்றும் வேப்பிலையிலிருந்து தயாரிக்கப்படும் ஜூஸைக் குடிக்கலாம். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, எடையைக் குறைக்கவும் உதவும். இதன் மூலம்,  உங்கள் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். 

ஆலூவேரா (Aloe vera) என்படும் கற்றாழை சருமத்தை பாதுகாத்து, ஒரு இரவு நேர எக்ஸ்போலியேட்டராக செயல்படுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதில் ஏராளமாகக் காணப்படுகின்றன, இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

கற்றாழை அதாவது ஆலூ வேரா (Aloe Vera), ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களின் களஞ்சியமாகும், இதில் ஏராளமான அமினோ அமிலங்கள் வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் ஈ ஆகியவற்றைக் கொண்டுள்ளன. கற்றாழையில் வைட்டமின்கள் மட்டுமல்ல, பீட்டா கரோட்டினும் உள்ளது என தோல் மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ALSO READ | Good News: 8 மாதங்களில் 60 கோடி கொரோனா தடுப்பூசி வழங்க தயாராகிறது இந்தியா

தோல், முடி சம்பந்தமான நோய் மட்டுமல்லாது பல நோய்களிலிருந்து விடுபடுவதற்கான பழமையான ஆயுர்வேத வைத்தியங்களில் ஒன்றாக வேம்பு, அதாவது வேப்பிலை (Neem) கருதப்படுகிறது. இதில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.

இவ்வளவு பயன்கள் நிறைந்த  கற்றாழை மற்றும் வேப்பிலையிலிருந்து ஜூஸ் தயாரிக்க உங்களுக்கு 1 டீஸ்பூன் வேப்ப இலைகள், 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல், 1 கப் தண்ணீர் மற்றும் தேன் தேவை. வேப்பிலையையும் கற்றாழையையும் தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, அதன் பின்  தேன் சேர்த்து உட்கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்தவுடன்  காலி வயிற்றில் உட்கொண்டால் சிறந்த பலன் கிடைக்கும். 

ALSO READ | கொரோனா தடுப்பூசிக்கு பிறகு 2 மாதங்களுக்கு No Alcohol: நிபுணர்கள் அறிவுரை   

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News