நிழல் உலக தாதா தாவூத்தின் 2வது திருமண விவகாரம்... உறவினர் அளித்த வாக்குமூலம்!

பாகிஸ்தானில் பதுங்கி வாழும் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானை சேர்ந்த பெண்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தாவூத்தின் சகோதரி மகன் NIA அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 17, 2023, 03:56 PM IST
  • மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய நில் உலக தாதாவான தாதா தாவூத் இப்ராகிம்.
  • 2022 ஜூலையில் துபாயில் தாவூத்தின் முதல் மனைவி மஹ்ஜபீனை சந்தித்ததாக அலிஷா விசாரணை அமைப்புகளிடம் கூறினார்.
நிழல் உலக தாதா தாவூத்தின் 2வது திருமண விவகாரம்... உறவினர் அளித்த வாக்குமூலம்! title=

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய நில் உலக தாதாவான தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் வாழ்ந்து வருகிறார். ஆனால், அவர் அங்கு இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானை சேர்ந்த பெண்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தாவூத்தின் சகோதரி மகன், தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். ஹசீனா பார்கரின் மகனும், தாவூத்தின் மருமகனுமான அலிஷா தேசிய புலனாய்வு பிரிவு (NIA) முன் இதனை தெரிவித்துள்ளார். இதை தாவூத்தின் முதல் மனைவியே வெளிப்படுத்தியதாகவும் அவர் என்ஐஏவிடம் தெரிவித்தார்.

தாவூத்தின் இரண்டாவது மனைவி பாகிஸ்தானின் பதான் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதையும் அலிஷா வெளிப்படுத்தியுள்ளார். இந்த தகவலை தாவூத்தின் சகோதரி ஹசீனா பார்க்கரின் மகன் செப்டம்பர் 2022 அன்று என்ஐஏவிடம் தெரிவித்ததாக வட்டாரங்கள் கூறுகின்றன. இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்ட பிறகு, தாவூத் தனது முதல் மனைவி மஹ்ஜபீனை விவாகரத்து செய்ததாக கூறுகிறார், ஆனால் இது உண்மையல்ல. அவர் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | அணுசக்தி வல்லமை கொண்ட பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் நடந்தால்? பாக் பிரதமர் அச்சம்

மஹ்ஜபீனை துபாயில் சந்தித்த அலிஷா 

 2022 ஜூலையில் துபாயில் தாவூத்தின் முதல் மனைவி மஹ்ஜபீனை சந்தித்ததாக அலிஷா விசாரணை அமைப்புகளிடம் கூறினார். அப்போது தாவூத்தின் இரண்டாவது திருமணம் குறித்து கூறிய அவர், தாவூத்தின் முதல் மனைவி இந்தியாவில் இருக்கும் உறவினர்களிடம் மட்டுமே வாட்ஸ்அப்பில் பேசுவதாகவும் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி, தாவூத்தின் புதிய இருப்பிடம் குறித்தும் அலிஷா, என்.ஐ.ஏ. விடம் தெரிவித்துள்ளார். தாவூத் இப்ராஹிம் இப்போது கராச்சியின் மிகவும் பாதுகாப்பான பகுதியில் உள்ள அப்துல்லா காஜி பாபா தர்காவுக்குப் பின்னால் உள்ள ரஹீம் ஃபகிக்கு அருகில் வசிக்கிறார் என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க | கோதுமை மாவிற்கு அடித்துக் கொள்ளும் மக்கள்! பாகிஸ்தானின் அவல நிலையை காட்டும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News