பிரதமர் மோடிக்கு மாற்று சக்தி ராகுல் காந்திதான் - துரை வைகோ!

தமிழகத்தில் பூரண மது விலக்கு என்பது தான் மதிமுக கொள்கை. போதை பொருள் நுழைவு வாயிலாக குஜராத் மாநிலம் உள்ளது - மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. பேட்டி.  

Written by - RK Spark | Last Updated : Oct 17, 2024, 11:04 AM IST
  • பிரதமர் மோடிக்கு மாற்று சக்தி ராகுல் காந்திதான்.
  • வேறொருவரை கொண்டு வருவது குழப்பத்தை ஏற்படுத்தும்.
  • துரை வைகோ எம்.பி. பேட்டி.
பிரதமர் மோடிக்கு மாற்று சக்தி ராகுல் காந்திதான் - துரை வைகோ! title=

சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 225வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாரில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மணி மணிமண்டபத்தில் மதிமுக சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான துரை வைகோ, சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், கால நிலை மாற்றம் காரணமாக பாலைவனத்தில் மழை பெய்யும் நிலை உள்ளது. சுற்றுச் சூழலை அனைவரும் பாதுகாக்க வேண்டும்.

மேலும் படிக்க | மக்களே ஜாக்கிரதை! இந்த 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!

தற்போது ஏற்பட்டு வருவது  இயற்கை பேரிடர் கிடையாது. அதற்கு மனிதர்கள் தான் காரணம். குட்டைகள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை மக்கள் சாக்கடை தேங்கும் இடமாக மாற்றி விட்டனர். கால நிலை மாற்றம் மிக மோசமான விளைவுகளை வருங்காலத்தில் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. காட்டுப் பன்றிகள் தொல்லையினால் தென் மாவட்டங்களில் விவசாயம் மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்கு ஒன்றிய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். சில மாநிலங்களில் காட்டு பன்றியை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு ஓராண்டுக்கு  அனுமதி கொடுத்து போல தமிழகத்திற்கும் வழங்க வேண்டும்.

வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இது குறித்து எடுத்துரைப்பேன். மேலும் தமிழக முதல்வர் மூலமாக ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போதை பொருள் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் இருந்து வருகிறது. போதை பொருள் நுழைவு வாயிலாக குஜராத் மாநிலம் உள்ளது. தமிழகத்தில் பூரண மது விலக்கு என்பது தான் மதிமுக கொள்கை, தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் மதிமுகவினர் தொடர்ந்து போராடி வருகிறோம். மது கடைகளை ஒழிப்பது மக்கள் கையில் உள்ளது. கலிங்கப்பட்டியில் திறக்கப்பட்ட மதுக்கடையை மதிமுக மக்களுடன் போராடி அகற்றியது. தமிழக அரசு படிப்படியாக மதுக்கடைகளை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. 

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. அருகில் உள்ள மாநிலங்களில் மது விற்பனை இருப்பதால் இங்கு கடத்தி வர வாய்ப்பு உள்ளது. மேலும் கள்ளச்சாராயம் விற்பனையும் அதிகாரிக்க வாய்ப்பு உள்ளது. இருந்த போதிலும் மது ஒழிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு தேவை. அதை தொடர்ந்து மதிமுக செய்து கொண்டு இருக்கிறது.சமீபத்தில் கூட விடுதலை சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது.

பிரதமர் மோடிக்கு மாற்று சக்தி என்றால் ராகுல் காந்தி தான் . எல்லோரும் பிரதமர் மோடி ,பாஜக மற்றும் மதவாத சக்திகளை எதிர்க்கிறோம் . ஆனால் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தலைமை என்றால் ராகுல் காந்தி தான். ராகுல் காந்திக்கு மாற்றாக வேறொருவரை கொண்டு வருவது என்பது குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி என்று பார்க்கிறேன். இந்தியா கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. பிரதமர் வேட்பாளர் என்றால் அதில் மாற்றுக்கருத்து ஏதும் இருக்காது. மோடிக்கு மாற்று ராகுல் காந்தி தான் என்றார்.

மேலும் படிக்க | இளைஞர்களிடையே பக்தி குறைவே மழைக்கு காரணம்: மதுரை ஆதீனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News