செரிமான பிரச்சனைகளுக்கு குட்பை சொல்லலாம்... இந்த 5 மசாலாக்கள் போதும்

செரிமான கோளாறு தானே என எளிதாக நினைக்க வேண்டாம். இது நீங்கள் நினைப்பதை விட பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. இதனை தடுக்க அற்புதமான மருத்துவ குணங்களைக் கொண்ட 5 மசாலாப் பொருட்கள் உதவும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 2, 2024, 02:33 PM IST
  • பல கடுமையான பிரச்சனைகளை நீக்கும் ஆற்றல் கொண்ட மசாலா பொருட்கள்.
  • அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் அற்புத மசாலா பொருட்கள்.
  • செரிமான பிரச்சனை ஏற்பட்டால், முக்கிய ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவது பாதிக்கும்.
செரிமான பிரச்சனைகளுக்கு குட்பை சொல்லலாம்... இந்த 5 மசாலாக்கள் போதும் title=

செரிமானக் கோளாறுகள் என்பது வயிறு, குடல், கல்லீரல், கணையம் மற்றும் பித்தப்பை ஆகியவை அடங்கிய இரைப்பை குடல் பாதையை பாதிக்கும் நோய்கள் ஆகும். செரிமான பிரச்சனைகளில் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு வீக்கம் மற்றும் வாயு நெஞ்செரிச்சல் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை அடக்கம். செரிமான கோளாறு தானே என எளிதாக நினைக்க வேண்டாம். இது நீங்கள் நினைப்பதை விட பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது

செரிமான பிரச்சனைகளால் ஊட்டச்சத்து குறைபாடுகள், சோர்வு, பலவீனம் ஏற்படலாம். ஏனெனில், செரிமான பிரச்சனை ஏற்பட்டால், முக்கிய ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவது பாதிக்கும். வைட்டமின் மற்றும் தாதுப் பற்றாக்குறை காரணமாக கணைய பாதிப்பு, கல்லீரல் பதிப்பு, பலவீனம், சோர்வு, இரத்த சோகை மற்றும் மூட்டு வலி எலும்பு தொடர்பான பிரச்சனைகள், போன்ற அறிகுறிகள் இதிலிருந்து எழலாம்.

இதனை தடுக்க அற்புதமான மருத்துவ குணங்களைக் கொண்ட 5 மசாலாப் பொருட்கள் உதவும். ஐந்து மசாலாக்கள் கலந்த கலவை என்பதால் இவற்றை பஞ்சாமிர்தம் எனவும் அழைக்கலாம். உடலின் பல கடுமையான பிரச்சனைகளை நீக்கும் ஆற்றல் கொண்ட இந்த மசாலாக்களை உட்கொள்வதன் மூலம், வயிறு மற்றும் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும். உடல் எடையைக் குறைக்கவும், பல நோய்களைத் தவிர்க்கவும் உதவும் இந்த மசாலாப் பொருட்கள் என்ன, அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம்.

நமது அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் உணவின் சுவையையும், நறுமணத்தையும், குணத்தையும் மேன்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தில் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. அந்த வகையில் சீரகம், வெந்தயம், தனியா, பெருஞ்சீரகம் என்னும் சோம்பு, மற்றும் செலரி ஆகிய ஐந்து மசாலாப் பொருட்களைக் கலந்து செரிமான ஆரோக்கியத்தை (Health Tips) மேம்படுத்தும் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது.

சீரகம்: சீரகம் என்றால் அகத்தை சீர் செய்யும் என்று பொருள். அகமாகிய நம் உடலை சீர்செய்யும் முக்கிய பணியை மேற்கொள்ளும், சீரகம் (Health Benefits of Cumin Seeds) கிட்டத்தட்ட அனைத்து வகை இந்திய உணவிலும் சேர்க்கப்படும் ஒரு மசாலா. சீரகம் வயிறு, செரிமானம் பிரச்சனைகளை நீக்கி, வலர்சிதை மாற்றத்தை தூண்டி உடல் எடையைக் குறைப்பதிலும் திறம்பட செயல்படுகிறது.

வெந்தயம்: ஆயுர்வேதத்தில் வெந்தயத்தை (Health Benefits of Fenugreek Seeds) வயிறு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரும்புச்சத்து, கோலின், பயோட்டின், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் டி, கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமான வெந்தயம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துடன், உடல் பருமனையும் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் வெந்தயம் கூந்தலுக்கும் நன்மை பயக்கும்.

மேலும் படிக்க | லுடீன் சத்து நிறைந்த மிளகாய்... உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்

பெருஞ்சீரகம்: பெருஞ்சீரகம் என்னும் சோம்பை பொதுவாக பலர் வாய் புத்துணர்ச்சியூட்டும் பொருளாக உட்கொள்கிறார்கள். ஆனால் ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. நார்ச்சத்து நிறைந்த பெருஞ்சீரகம் உடலின் நச்சுக்களையும் அழுக்குகளையும் நீக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது. எடையைக் குறைக்கவும் பெருஞ்சீரகம் உதவுகிறது. பெருஞ்சீரகம் குடல் வீக்கத்தை போக்கி, வாயுவை உண்டாக்கும் பாக்டீரியாவை அழிப்பதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்துகிறது

தனியா: உடலில் ஏற்படும் அழற்சியையும் வீக்கத்தையும் குறைக்க உதவும் தனியா என்னும் கொத்தமல்லி விதை வயிற்றுக்கு நன்மை பயக்கும். வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி, உடல் பருமனை குறைக்கிறது. கொத்தமல்லி விதையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தை குறைத்து புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.

செலரி: செலரி விதைகள் வாயு, அமிலத்தன்மை மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை நீக்குவதில் மிகவும் நன்மை பயக்கும். இது செரிமானத்தை துரிதப்படுத்துகிறது. செலரி விதைகள் போட்டு கொதிக்க வைத்த நீர் கூட உடல் பருமனை குறைக்க உதவுகிறது.

பஞ்சாமிர்த மசாலா நீர் தயாரிப்பது எப்படி?

மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து மசாலாப் பொருட்களையும் தலா 1 டீஸ்பூன் எடுத்துக் கொண்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, இரவு முழுவதும் ஊற விடவும். காலையில் இந்த தண்ணீரை சிறிது சுட வைத்து வெதுவெதுப்பாகக் குடிக்கவும். இதனை தொடர்ந்து குடித்து வந்தால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். வயிறு உப்புசம், வாயு மற்றும் அஜீரணம் போன்ற பல பிரச்சனைகளுக்கு இந்த மசாலாப் பொருள்கள் பயனுள்ளதாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | அளவுக்கு அதிகமானால் வெள்ளரியும் வில்லனாகும்: வெள்ளரிக்காயின் பக்க விளைவுகள் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News