5 Zodiac Signs That Over Think Everything : அதிகமாக யோசிப்பதே என்பது ஒரு வித நோய் போன்றதுதான். குண்டூசி பிரச்சனையாக இருந்தாலும், அதனை பெரிதாகப் பார்ப்பதில் பல கைதேர்ந்தவர்களாக இருப்போம். ஒரு சின்ன விஷயத்தையும் பூதம் போல பெரிதாக காண்பிக்கும் இந்த யோசனை திறனுக்கு பெயர் போன சில ராசிகள் இருக்கின்றனர். அவர்கள் யார் என்பதை பார்ப்போம்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள், தங்களை சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும் உன்னிப்பாக பார்க்கும் திறன் உடையவர்களாக இருப்பர். ஒவ்வொரு விஷயத்தையும் பல்வேறு கோணங்களில் இருந்து பார்க்கும் அவர்கள், அதனை பலவிதமாக யோசிக்கவும் தெரிந்தவர்களாக இருப்பர். ஒரு விஷயத்தை கச்சிதமாக செய்து முடிக்க வேண்டும் என் நினைக்கும் இவர்களின் எண்ணமே பல சமயங்களில் இவர்களின் இந்த அதிக யோசனை திறனுக்கு அடித்தளமாக இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் உணர்ச்சித்திறன் மிக்கவர்களாக இருப்பர். தான் என்ன பேசுகிறோம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை கூட யோசித்து யோசித்து செய்த பழகியவர்கள் இவர்கள். தான் பேசும் சில விஷயங்கள் கூட பிறரது மனதை பாதித்து விடுமோ என்று இவர்கள் யோசித்து பேசுவார்கள். ஒன்றுமே இல்லாத சில விஷயங்களில் கூட இவர்கள் மறைந்திருக்கும் அர்த்தத்தை கண்டுபிடிக்க நினைப்பார்கள். இதனால் இவர்களுக்கு தேவையற்ற மன குழப்பமும் பயமும் வரும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களின் இயல்பே, ஒரு விஷயத்தைப் பற்றி ஆர்வத்துடன் இருப்பதுதான். இதுவே அவர்களை பல நேரங்களில் ஆழ்ந்து யோசிக்க வைத்துவிடும். தன்னைப் பற்றி மட்டும் யோசிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், தன்னை சுற்றி இருப்பவர்கள் பற்றியும் யோசித்து தங்களை குழப்பிக் கொள்வர். இதனால் இவர்களுக்கு பல சமயங்களில் முடிவெடுக்க கடினமாக இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள், புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்ள நினைப்பவர்களாக இருப்பர். ஒரு விஷயத்தை, பல கோணங்களில் இருந்தும், அதன் அவுட்புட் என்னவாக இருக்கும் என்பது குறித்தும் இவர்களால் யோசிக்க முடியும். இதனால், இவர்களின் தலையில் உள்ள யோசனைகளும் நிற்காமல் சுற்றிக்கொண்டே இருக்கும். இதனால், அவர்களே நினைத்தாலும் அந்த அதிக யோசிக்கும் திறனை நிறுத்த முடியாமல் இருக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்கள், தன் கண் முன் ஒரு விஷயம் நிகழ்வதற்கு முன்னரே அதை பற்றி கணித்து வைத்திருப்பவர்களாக இருப்பர். இவர்களுக்குள் இருக்கும் அந்த உள்ளுணர்வு அவ்வளவு வலுவானதாக இருக்குமாம். இப்படி, அனைத்து விஷயங்களையும் ஆழ்ந்து உணரும் திறன் கொண்ட இவர்கள், தங்களின் உறவுகள் தாங்கள் இருக்கும் சூழல்கள் என அனைத்தையும் யோசித்து எடை போடுபவர்களாக இருப்பர். அடுத்து என்ன நிகழுமோ என்பதும் இவர்களின் பெரிய பயங்களுள் ஒன்றாகவும் அதிக யோசனை திறங்களுள் ஒன்றாகவும் இருக்கும்.
மேலும் படிக்க | இந்த ராசிகாரர்களுக்கு மட்டும் பிரச்சனை தேடி வரும்.. இதுதான் காரணமாம்!
மேலும் படிக்க | வெற்றியை காந்தம் போல ஈர்க்கும் 5 ராசிகள்!! யார் யார் தெரியுமா?
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ