GV Prakash About Divyabharathi Divorce With Saindhavi : காதல் திருமணம் செய்து கொள்ளும் சினிமா பிரபலங்கள் கூட கடந்த சில ஆண்டுகளில் தங்களது விவாகரத்து அறிவிப்புகளை வெளியிட்டது ரசிகர்களால் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்படி, அனைவருக்கும் ஷாக் கொடுத்தது ஜி.வி.பிரகாஷ்-சைந்தவியின் திருமணம் முறிவு அறிவிப்புதான்.
இசையமைப்பாளராகவும் பாடகராகவும் மட்டும் இருந்த ஜி.வி.பிரகாஷ் குமார் டார்லிங் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு, தொடர்ந்து தான் நடிக்கும் படங்களுக்கு, தானே இசையமைத்தும் பாடல்களை பாடியும் வருகிறார். இவர், தனது விவாகரத்து குறித்து சமீபத்தில் மனம் திறந்து பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திவ்ய பாரதியுடன் நெருக்கம்?
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் 2021ஆம் ஆண்டு நடித்திருந்த படம், பேச்சுலர். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்திருந்தார். இந்த படத்தில் இருவருக்கும் நெருக்கமான காட்சிகள் அதிகமாகவே இருந்தன. திரைக்கு பின்னாலும் இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகியதாக கூறப்பட்டது. ஆனால், இதனை ஆதரிக்கும் வகையில் எந்த ஆதாரங்களும் வெளியாகவில்லை. இருப்பினும், திவ்ய பாரதியும் ஜிவியும் நெருக்கமாக பழகி வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தன.
விவாகரத்துக்கு காரணம்..
பொதுவாக, சினிமா பிரபலங்கள் பிரிகின்றனர் என்றால் அதற்கு திருமணத்திற்கு மீறிய உறவுகள் காரணமாக இருக்கலாம் என கூறப்படுவது வழக்கம். அது போலத்தான், திவ்ய பாரதியுடன் ஏற்பட்ட உறவால்தான் ஜிவி பிரகாஷ் சைந்தவியை பிரிந்ததாக பலர் தங்களின் வாய்க்கு வந்தவாறு பேசினர். மேலும், ஜிவியின் கேரக்டர் குறித்த தவறான கருத்துகளும் இணையம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இதையடுத்து என்ன நடந்தது என தெரியாமல் இப்படி பலரும் பேசுவது மன உளைச்சலை ஏற்படுத்துவதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார். சைந்தவியும் தனக்கு இதன் பிறகும் கூட ஜி.வி நல்ல நண்பராக தொடருவார் என்றும் ஊடகங்களில் பரவும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்றும் கூறினார்.
உண்மையை உடைத்த ஜி.வி..
நடிகர் ஜி.வி பிரகாஷ், கிங்க்ஸ்டன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். கமல் பிரகாஷ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜிவிக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்திருக்கிறார். பேச்சுலர் படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் ஒன்று சேருவது இந்த படத்தில்தான். மார்ச் 7ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் இப்படக்குழு ஈடுபட்டிருக்கின்றனர். அப்படியொரு நிகழ்ச்சியில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனக்கும் திவ்ய பாரதிக்குமான உறவு குறித்து பேசியிருக்கிறார்.
“பேச்சுலர் படத்திற்கு பிறகு நாங்கள் டேட்டிங் செய்கிறோம் என பேசுகின்றனர். ஆனால், நாங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டை தவிர வேறு எங்குமே சந்தித்து கொண்டதில்லை. இருவரும் ஒன்றாக வேலை பார்ப்பவர்கள், அவ்வளவுதான்” என்று கூறியிருக்கிறார்.
திவ்ய பாரதியும் இது குறித்து ஒருமுறை பேசினார். ஜி.வி-சைந்தவியின் விவாகரத்து குறித்த அறிவிப்பு வந்த போது “நீதான் அதற்கு காரணம்” என்று கூறி பல ரசிகர்கள் தனக்கு மெசஜ் அனுப்பியதாக கூறியிருக்கிறார். இது பாேன்று வரும் செய்திகளையும் மெசஜ்களையும் கூட அவர் ஜி.விக்கு அனுப்பி “என்னை பத்தை ரொம்ப தப்பா பேசுறாங்க..” என்று கூறுவாராம். இவ்வளவுதான் இவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு என்பதையும் இருவரும் விளக்கியிருக்கின்றனர்.
மேலும் படிக்க | மீண்டும் இணையும் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி! யாரால் தெரியுமா?
மேலும் படிக்க | மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ் - திவ்ய பாரதி! அதுவும் இந்த படத்திலா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ