PM Kisan: 19வது தவணை யாருக்கு கிடைக்கும், யாருக்கு கிடைக்காது? செக் செய்வது எப்படி?

PM Kisan 19th Installment: சில விவசாயிகள் இந்த முறை இந்தத் தவணையின் பலனைப் பெற முடியாமல் போகலாம். இதற்கு என்ன காரணம்?

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 13, 2025, 03:49 PM IST
  • பிஎம் கிசான் தவணை நிலையை செக் செய்வது எப்படி?
  • இந்தத் திட்டத்திற்கு யார் தகுதியானவர்?
  • பிரதமர் கிசானுக்கு KYC அவசியமா?
PM Kisan: 19வது தவணை யாருக்கு கிடைக்கும், யாருக்கு கிடைக்காது? செக் செய்வது எப்படி? title=

PM Kisan Samman Nidhi Yojana: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பப்படுகிறது. இதுவரை, 18 தவணைகள் விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. 

PM Kisan 19th Installment: பிஎம் கிசான் 19வது தவணை எப்போது கிடைக்கும்?

விவசாயிகள், பிஎம் கிசான் 19வது தவணைக்காக காத்திருக்கிறார்கள். இது பிப்ரவரி 24, 2025 அன்று விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என கூறப்படுகின்றது. இருப்பினும், சில விவசாயிகள் இந்த முறை இந்தத் தவணையின் பலனைப் பெற முடியாமல் போகலாம். இதற்கு என்ன காரணம்? யாருக்கெல்லாம் பிஎம் கிசான் தவணைத்தொகை கிடைக்காது? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

பிஎம் கிசான் 19வது தவணை யாருக்கு கிடைக்காது?

இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற, விவசாயிகள் சில பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும். விவசாயிகள் இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால், அவருக்கு 19வது தவணை கிடைக்காது.

- நிறுவன நில உரிமையாளர்கள்: நிறுவன விவசாய நிலத்தை வைத்திருக்கும் விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் எந்தவிதமான நிதி உதவியையும் பெற முடியாது.
- அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்: ஒரு விவசாயி அரசு ஊழியராக இருந்தால் அல்லது மாதந்தோறும் ரூ.10,000க்கு மேல் ஓய்வூதியம் பெற்றால், அவர் இந்தத் திட்டத்தின் பலனைப் பெற முடியாது.
- அதிக வருமானம் பெறும் வல்லுநர்கள்: மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், பட்டயக் கணக்காளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் போன்ற அதிக வருமானம் பெறும் வல்லுநர்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தாலும் இந்தத் திட்டத்திற்குத் தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள்.
- வருமான வரி செலுத்தும் விவசாயிகள்: வருமான வரி செலுத்தும் விவசாயிகளும் இந்தத் திட்டத்தின் பயனாளிகளாக முடியாது.
- தவறான அல்லது முழுமையற்ற தகவல்களை வழங்கும் விவசாயிகள்: ஒரு விவசாயி விண்ணப்பிக்கும் போது தவறான தகவலை வழங்கியிருந்தால் அல்லது அவரது ஆவணங்களில் ஏதேனும் பிழை காணப்பட்டால், அரசாங்கம் அவரது பெயரை பயனாளிகள் பட்டியலிலிருந்து நீக்கலாம்.
- e-KYC செய்யாத விவசாயிகள்: PM கிசான் யோஜனாவில் தொடர்புடைய விவசாயிகளுக்கு அரசாங்கம் e-KYC-ஐ கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை e-KYC செய்யாத விவசாயிகளுக்கு 19வது தவணை நிறுத்தப்படலாம்.
- வங்கிக் கணக்குகளில் சிக்கல்கள் உள்ள விவசாயிகள்: ஒரு விவசாயியின் வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால் அல்லது அவர்களின் கணக்கில் ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல் இருந்தால், 19வது தவணை அவர்களின் கணக்கிற்கு அனுப்பப்படாது.
- நிலப் பதிவேடுகளில் முரண்பாடுகள் உள்ள விவசாயிகள்: ஒரு விவசாயியின் நிலப் பதிவேடுகளில் ஏதேனும் பிழை காணப்பட்டாலோ அல்லது அவர்கள் திட்டத்தின் தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்றாலோ, அவர்களின் பெயர் பயனாளிகள் பட்டியலிலிருந்து நீக்கப்படலாம்.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா: தவணைத் தொகைக்கான தகுதியை எவ்வாறு சரிபார்ப்பது?

விவசாயிகள் தங்களுக்கு 19வது தவணை கிடைக்குமா இல்லையா என்பதை அறிய விரும்பினால், pmkisan.gov.in என்ற PM Kisan இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி நிலவரத்தைச் செக் செய்யலாம்.

- பிஎம் கிசானின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- ‘Beneficiary Status’ என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் பதிவு எண் அல்லது மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- உங்கள் தவணை நிலை திரையில் காட்டப்படும்.

PM Kisan Nidhi Yojana: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் என்றால் என்ன?

பிரதான் மந்திரி கிசான் சம்மாமன் நிதி யோஜனா என்பது விவசாயிகளுக்கான மத்திய அரசின் தனித்துவமான ஒரு திட்டமாகும். இதன் கீழ் ஒவ்வொரு ஆண்டும் தகுதியுள்ள விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.6,000 வழங்கப்படுகிறது.

பிரதம மந்திரி கிசான் யோஜனாவில் எத்தனை தவணைகள் உள்ளன?

ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு மூன்று தவணைகள் கிடைக்கும்.
- முதல் தவணை: ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில்
- இரண்டாவது தவணை: ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில்
- மூன்றாவது தவணை: டிசம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில்

பிரதம மந்திரி கிசான் யோஜனாவுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

- முதலில் pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- ‘New Farmer Registration’ விருப்பத்தை சொடுக்கவும்.
- தேவையான தகவல்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

பிஎம் கிசான் தவணை நிலையை செக் செய்வது எப்படி?

- முதலில் pmkisan.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
- ‘Beneficiary Status' விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- ஆதார் எண் அல்லது மொபைல் எண்ணை உள்ளிட்டு ஸ்டேடசை செக் செய்யலாம்.

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: மாறும் விதிகள்? 65 வயதிலேயே 5%, 10%, 15% கூடுதல் ஓய்வூதியம்?

மேலும் படிக்க | EPFO: உங்கள் PF கணக்கில் உள்ள பணத்தை அறியும் சில எளிய வழிமுறைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News