EPFO Update: சமீபத்தில் தாக்க்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மோடி அரசாங்கம், வரி இல்லாத வருமானத்தின் அளவை அதிகரித்துள்ளது. இது சம்பள வர்க்கத்தினருக்கு ஒரு பெரிய பரிசாக கருதப்படுகின்றது. பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய நன்மை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக அரசாங்கம் இபிஎஃப் உறுப்பினர்களுக்கும் ஒரு பெரிய பரிசை வழங்கக்கூடும் என கூறப்படுகின்றது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்
பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்காக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு சந்தையில் தேவையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு, அரசாங்கம் இப்போது PF ஊழியர்களின் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை அதிகரிப்பதாக அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Central Board of Trustee: பிப்ரவரி 28 மத்திய அறங்காவலர் குழுவின் முக்கிய கூட்டம்
பிப்ரவரி 28 ஆம் தேதி EPFO -வின் மத்திய அறங்காவலர் குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்த முடிவு எடுக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் ஊழியர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.
மத்திய அரசு இப்போது சந்தை தேவையை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது. இதற்கு உத்வேகம் அளிக்க, அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. இந்த நோக்கத்திற்காக, அரசாங்கம் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களின் வருமானத்தை வரியிலிருந்து விலக்கியுள்ளது. மக்கள் பணத்தைச் சேமிக்கும்போது, முடிந்தவரை உள்நாட்டு நுகர்வை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்படும் என்று அரசாங்கம் கருதுகிறது.
EPF Interest Rate: இபிஎஃப் வட்டி விகிதம்
இப்போது 2024-25 ஆம் ஆண்டிற்கான PF வட்டி விகிதத்தை அதிகரிக்க ஒரு முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில், இதற்காக அரசு பல்வேறு பணிகளைச் செய்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் பிஎஃப் வட்டி விகிதத்தை 8.15 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. 2023-24 ஆம் ஆண்டில், இது 8.25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இப்போது வங்கிகளின் அடிப்படை விகிதத்தைப் பார்க்கும்போது, இபிஎஃப் வட்டி விகிதங்கள் மீண்டும் உயர்த்தப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
EPF Subscribers: நாடு முழுவதும் எத்தனை இபிஎஃப் சந்தாதாரர்கள் உள்ளனர்?
EPFO-வில் நாடு முழுவதும் 7 கோடிக்கும் மேற்பட்ட PF சந்தாதாரர்கள் உள்ளனர். 2023-24 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 7.37 கோடியாக இருந்தது. இதேபோல், EPFOவின் ஓய்வூதிய நிதியில் பணத்தை டெபாசிட் செய்பவர்களின் எண்ணிக்கையும் சுமார் 8 லட்சத்தை எட்டியுள்ளது. அரசாங்கம் PF ஊழியர்களுக்கு ஆண்டு வட்டித் தொகையை வழங்குகிறது. 2023-24 ஆம் ஆண்டிற்கான EPFO வின் ஆண்டு அறிக்கையின்படி, பங்களிப்பு செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை 2022-23 ஆம் ஆண்டில் இருந்த 7.18 லட்சத்திலிருந்து 6.6 சதவீதம் அதிகரித்து 7.66 லட்சமாக அதிகரித்துள்ளது. லட்சக்கணக்கான ஊழியர்கள் தங்கள் நீண்டகால சேமிப்பிற்காக இந்த இபிஎஃப் வைப்புத்தொகைகளைச் சார்ந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் படிக்க | தங்கம் வாங்க விரும்புபவர்களுக்கு அதிர்ச்சி அளித்த விலை! இனி வாங்கவே முடியாதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ