சீமான் குறித்த புகைப்பட சர்ச்சை தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களை சூழ்ந்துள்ளது. அவர் இலங்கைக்கு சென்று பிரபாகரனை சந்தித்தாரா? அவருக்கு ஆமைக்கறி சாப்பிட்டாரா? சீமான் பிரபாகரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் உண்மையா என பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், என்ன தான் நடக்கிறது என்பதை காணலாம்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் அனுமதியின்றித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஒரே நாளில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெண் அடிமைத்தனத்தை உருவாக்கியவர் பெரியார் என்றும், அதனால் பெரியார் குறித்து சீமான் பேசுவது தவறில்லை என்றும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார்.
பிரபாகரனுடன் தான் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தொடங்கி பல ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு கட்சிக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்த மைக் சின்னம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என்று வெங்காயம் படத்தின் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த 4 வேட்பாளர்கள் உட்பட 58 வேட்பாளர்கள் என மொத்தம் 65 வேட்புமனு தாக்கல் செய்து இருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் தெரிவித்துள்ளார்.
சீமான், பெரியார் குறித்து சர்ச்சையான வகையிலும், அவமதிக்கும் வகையிலும் பேசிய நிலையில்அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழும்பி, நடிகை விஜயலட்சுமி சீமானை, கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், பாஜக போட்டியிடவில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
சீமான் இனிமேல் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும், நிச்சயம் தண்டனை வாங்கி தருவேன் என்றும் திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் தெரிவித்துள்ளார்.
சீமான் மீது ஈழ தமிழர்கள் வைத்திருந்த நம்பிக்கையை முழுமையாக இழந்து விட்டனர் என நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியவர்கள் கூட்டாக பேட்டியளித்தபோது தெரிவித்துள்ளனர்.
சீமான் - ரஜினிகாந்த் சந்திப்பு சாதாரணமான சந்திப்புதான் என்றும், ரஜினிகாந்த் இந்தத் தேர்தலுக்கு நிச்சயமாக வர மாட்டார் என்றும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.