தமிழகத்தில் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறப்பு!

Last Updated : May 26, 2017, 04:41 PM IST
தமிழகத்தில் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறப்பு! title=

கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 7-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

சென்னை அம்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்:-

பள்ளிகள் திறக்கப்படும் அன்றே பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் பள்ளிகள் திறந்து ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் கோடை வெப்பம் அதிகமாக நிலவுகிறது. வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைக் கடந்து வாட்டிவதைத்துக் கொண்டிருக்கிறது.

இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், "கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும்" என அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

Trending News