பிக்பாஸ் 7: பிரதீப் ஆண்டனி மொத்தமாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Pradeep Antony Salary for Bigg Boss 7: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் குமார் வெளியேற்றப்பட்டார். அவர் இந்த நிகழ்ச்சி மூலம் இதுவரை சம்பாதித்துள்ளது எவ்வளவு தெரியுமா? 

Written by - Yuvashree | Last Updated : Nov 5, 2023, 12:35 PM IST
  • பிக்பாஸில் இருந்து ரெட் கார்டுடன் வெளியேறியவர், பிரதீப்.
  • இவர் வெளியேறியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
  • பிரதீப் மொத்தமாக பிக்பாஸ் மூலம் சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் 7: பிரதீப் ஆண்டனி மொத்தமாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?  title=

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழ் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோக்களுள் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. பிக்பாஸ் போட்டியின் 7வது சீசன் கடந்த மாதம் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில் பலமான போட்டியாளராக கருதப்பட்ட பிரதீப் ஆண்டனி, ரெட் கார்டு காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். 

பிரதீப் ஆண்டனி:

கோலிவுட் திரையுலகில் பிரபலமான துணை நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர், பிரதீப் ஆண்டனி. அருவி படம் மூலம் இவர் பிரபலமானார். கவின் நடிப்பில் இந்த ஆண்டின் பிப்ரவி மாதம் வெளியான ‘டாடா’ படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். படம் இயக்க வேண்டும் என்ற கனவோடு இருந்த இவருக்கு, பெரிய மேடையாக அமைந்திருந்தது பிக்பாஸ். இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்த வலுவான போட்டியாளராக கருதப்பட்ட பிரதீப், சமீபத்தில் நிகழ்ச்சியில் நடைப்பெற்ற சில சம்பவங்களால் ஹவுஸ் மேட்ஸ்களை பகைத்து கொண்டார். 

பிரதீப்புக்கு ரெட் கார்டு..

பிரதீப் ஆண்டினிக்கும் அவரது சக போட்டியாளரான கூல் சுரேஷிற்கும் போட்டியில் நடைப்பெற்ற ஒரு டாஸ்கில் முட்டிக்கொண்டது. அப்போது இவர் கூல் சுரேஷை தகாத வார்த்தைகளால் பேசினார். இது பிற போட்டியாளர்களுக்கு பிடிக்காததால் அவர்கள் பிரதீப்பை மன்னிப்பு கேட்குமாறு கூறினர். ஆனால், பிரதீப் “கமல் சாரே வந்து கூறினாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன்..” என்று கூறினார். இதனால் மாயா, பூர்ணிமா, ரவீனா, நிக்ஸன் உள்ளிட்ட பிற போட்டியாளர்கள் வார இறுதி நாள் எபிசாேடில் உரிமை குரல் எழுப்பினர். 

மேலும் படிக்க | பிக்பாஸ் பிரதீப் குறித்து போஸ்ட் போட்ட கவின்! என்ன சொன்னார் தெரியுமா?

“பிரதீப்பால் பெண்கள் பாதுகாப்பு இல்லாதது போல உணர்கின்றனர்..” என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதையடுத்து அனைவரிடமும் கமல் தனித்தனியாக பிரதீப்பிற்கு ரெட் கார்டு காண்பித்து வெளியில் அனுப்பலாமா என்று கேட்டார். அதற்கு பெரும்பாலானோர் ‘Yes’ சொன்னதால் பிரதீப் நேற்று போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

சம்பள விவரம்..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருக்கும் அனைவருக்குமே ஒரு நாளைக்கு இத்தனை ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் இறுதியில் பெரிய தொகை ஒன்று சம்பளமாக வழங்கப்படுகிறது. அதன்படி, பிரதீப் குமாருக்கும் ஒரு பெரிய தொகை வழங்கப்பட உள்ளது. பிரதீப்புக்கு பிக்பாஸ் போட்டியில் இருந்த ஒரு நாளைக்கு ரூ. 20 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது. தற்போது அவர் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளதால் மொத்தம் 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மாெத்த ரொக்க தொகையாக வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

ரசிகர்கள் கொந்தளிப்பு..

பிரதீப், பாதியிலேயே இப்போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த முடிவிற்கு காரணமாக இருந்த கமல்ஹாசனையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. “கமல் பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசுகிறாரா..?” என்று கேலிக்குரிய பாணியிலும் சிலர் சமூக வலைதளங்களில் அவரை ரோஸ்ட் செய்து வருகின்றனர். 

மேலும், பிரதீப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் குறை கூறும் யாரும் ஒழுங்கில்லை என்று கூறும் ரசிகர்கள் பலரும் மரியாதை குறைவாக நடந்து கொள்வதாகவும், அவர்களுக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். 

மேலும் படிக்க | BB 7 Tamil: பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது சரியா-தவறா? ரசிகர்கள் கருத்து இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News