பாலியல் குற்றங்களுக்கு செல்போன் தான் காரணம் - கண்டுபிடித்த நடிகர் கருணாஸ்!

தமிழ்நாட்டில் தற்போது மட்டுமல்ல, கடந்து 15 ஆண்டு காலமாகவே பாலியல் குற்றங்கள் அதிகரித்து இருக்கிறது. நம்முடைய வாழ்க்கை முறை, செல்போன் தான் காரணம் என கண்டுபிடித்த நகைச்சுவை நடிகர் கருணாஸ்.

Written by - RK Spark | Last Updated : Feb 17, 2025, 07:25 AM IST
  • 15 ஆண்டுகளாக பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது.
  • இதற்கு செல்போன் தான் காரணம்.
  • நகைச்சுவை நடிகர் கருணாஸ் பேட்டி.
பாலியல் குற்றங்களுக்கு செல்போன் தான் காரணம் - கண்டுபிடித்த நடிகர் கருணாஸ்! title=

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் நடிகர்ருமான கருணாஸ் தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து சாமி கும்பிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கருணாஸ் தன்னுடைய பிறந்தநாளை ஒட்டி இங்கு வந்து ஆசி வாங்க வந்ததாகவும், இனிய பிறந்தநாள் முன்னிட்டு சிவகாசியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரின் விளையாட்டுதுறையை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் கபடி போட்டி நடைபெற உள்ளதாக தெரிவித்தார். விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு போடப்பட்டதற்கு அரசியல் காரணம் இருக்கலாம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிறைவாக உள்ளது. சிறு தவறு கூட நடந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | சுழல் சீசன் 2 ஓடிடி ரிலீஸ் தேதி!! எந்த தளத்தில், எப்போது வெளியாகிறது தெரியுமா?

தமிழ்நாட்டில் தற்போது பாலியல் குற்றங்கள் 15 ஆண்டு காலமாக அதிகரித்து இருக்கிறது. இதற்கு காரணம் நம்முடைய வாழ்க்கை முறை, செல்போன் தவறான விஷயங்களை மக்களிடம் எடுத்துச் செல்கிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்கிறது, திமுக ஆட்சியில் எந்த ஒரு குற்றச்சாட்டும் உடனடி நடவடிக்கை எடுத்து சரி செய்யப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்பது 200% உண்மையான செய்தி. அதற்கு காரணம் ஈரோடு இடைத்தேர்தல், நான்காண்டு கால நல்லாட்சி மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு துறையில் முன்னேற்றம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றதோ அதைப்போல சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கப்படுவது தொடர் கதைதான், இது சாதாரண பொது மக்களுக்கும் தெரியும். பிஜேபி ஆளும் மாநிலங்களில் உள்ள தலைவர்களும் அவர்களுக்கு நிதி ஒதுக்காததை பற்றி கொஞ்சம் கூட வருத்தம் இல்லாமல் அதை பெருமையாக சொல்வது வேதனைக்குரியதுதான்.

டெல்லியை பிடிக்க என்னென்ன கூத்து நடந்தது என்பதை அனைவரும் அறிவர். பாஜக ஆட்சி மதவாத கூட்டணி கடந்த ஐந்தாண்டுகளில் அமலாக்கத்துறை மூலம் எவ்வளவு நெருக்கடியை கொடுத்து இருப்பார்கள். அவர்கள் எந்த மாநிலத்தில் என்னென்ன குறைகளை வைத்து ஆட்சி செய்ய முயற்சி செய்தாலும் தமிழகத்தில் எடுபடாது தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மும்மொழிக் கொள்கை விஷயத்தில் தமிழக முதல்வர் உங்கள் நிதி எங்களுக்கு தேவை இல்லை என உறுதியாக கூறிவிட்டார், தமிழகத்தைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கைதான் அதை எந்த காலத்திலும் திமுக அரசு விட்டுக் கொடுக்காது என பேட்டியளித்தார்.

மேலும் படிக்க - RCD Mandatory | மின் இணைப்பு குறித்து அவசர அறிவிப்பு.. தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News