மகளிர் உரிமை தொகைக்கு செயல்படாத வங்கி கணக்கு எண்ணை கொடுத்துவிட்டீர்களா?

Magalir Urimai Thogai | மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும்போது செயல்படாத, பழைய வங்கி கணக்கு எண்ணை கொடுத்துவிட்டீர்கள் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 24, 2024, 06:33 PM IST
  • மகளிர் உரிமைத் தொகை லேட்டஸ்ட் அப்டேட்
  • தவறான வங்கி கணக்கு எண் கொடுத்துவிட்டீர்களா?
  • நீங்கள் எப்படி மாற்ற வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்
மகளிர் உரிமை தொகைக்கு செயல்படாத வங்கி கணக்கு எண்ணை கொடுத்துவிட்டீர்களா? title=

Kalaignar Magalir Urimai Thogai | தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்து, உங்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டபோதும் கொடுத்த வங்கி கணக்குக்கு பணம் வரவில்லையா?. இதற்கு பல காரணங்கள் உள்ளன. நீங்களே கூட தெரியாமல் மிகப்பெரிய தவறுகளை செய்திருக்க வாய்ப்புகள் உண்டு. அதாவது, ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத வங்கி கணக்கை கொடுத்திருப்பது அல்லது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு, செயல்படாத வங்கி கணக்காக இருக்கலாம். இதையெல்லாம் பயனாளியான நீங்கள் தான் கொடுக்கப்பட்ட தகவல் எல்லாம் சரியாக இருக்கிறதா? என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். ஒருவேளை மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும்போது பழைய வங்கி கணக்கு கொடுத்துவிட்டீர்கள் என்றால் என்ன செய்யலாம்? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். 

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் : தமிழ்நாடு அரசு குடும்ப அட்டை வைத்திருக்கும் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கொடுத்து வருகிறது. மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் இந்த திட்டத்தில் சுமார் 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் மாதந்தோறும் பயன்பெற்று வருகின்றனர். புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இருப்பினும் ஏற்கனவே விண்ணப்பித்த எல்லோருடைய மனுக்களையும் அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.

மேலும் படிக்க | கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வரவில்லையா? இந்த எண்களில் புகார் தெரிவிக்கலாம்

விண்ணப்பதாரர்களின் மனுக்களை கவனமாக பரிசீலுக்கும் அரசு, சில பல காரணங்களுக்காக விண்ணப்பதாரர்களின் மனுக்களை நிராகரிக்கவும் செய்கிறது. அரசு நிர்ணயித்த தகுதிகளை பூர்த்தி செய்யாதவர்கள், முறையான தகவல்களை கொடுக்காதவர்களின் விண்ணப்பங்கள் எல்லாம் நிராகரிக்கப்படுகின்றன. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய முடியும். 

தவறான வங்கி கணக்கு எண் மாற்றும் முறை : ஒருவேளை உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தும் பணம் வரவில்லை என்றால், நீங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பழைய வங்கி கணக்கு எண்ணாக இருக்கலாம். அதாவது, செயல்படாமல் இருக்கும் வங்கி கணக்கு எண்ணாக இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு நீங்கள் முதலில் உங்கள் வங்கி கணக்கு எண் மீண்டும் செயல்படுத்த முயற்சி எடுக்க வேண்டும். வங்கிக்கு சென்று முறையான ஆவணங்களை சமர்பித்து வங்கி எண்ணை ஆக்டிவேட் செய்யுங்கள். அல்லது புதிய வங்கி கணக்கை தொடங்கவும். அதன்பிறகு இ சேவை மையத்துக்கு சென்று வங்கி கணக்கு எண் மாற்றப்பட்ட விவரத்தை சொல்லி, பாஸ்புக் அப்டேட் செய்யுங்கள்.  

மகளிர் உரிமை தொகைக்கு தேவையான ஆவணங்கள் : ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும். மகளிர் உரிமைத் தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்கும்போது உங்கள் விண்ணப்பம் எதனால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது, பணம் எதனால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்ற தெளிவான காரணத்தை அறிந்து, ஆவணங்களை சமர்பித்தால் உங்களுக்கான மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்.

மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை பணம் உங்களுக்கு வரவில்லையா? அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News