மகன் கண் முன்னே விபத்தில் சிக்கி பலியான தாய்: திருப்பத்தூரில் பரிதாபம்

திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது பஸ் மோதியதில் விபத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 27, 2022, 10:55 AM IST
மகன் கண் முன்னே விபத்தில் சிக்கி பலியான தாய்: திருப்பத்தூரில் பரிதாபம் title=

திருப்பத்தூர் அருகே மகனின் கண் முன்னே அவரது தாய் விபத்தில் சிக்கி பலியான பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. தினம் தினம் தொடரும் சாலை விபத்துக்களால் மக்கள் பீதியில் உள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் துரை நகர் அருகே திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது பஸ் மோதியதில் விபத்தில் (Road Accident) சிக்கி பெண் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி திம்மாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவா. அவருக்கு வயது 40. அவரது மனைவி சரஸ்வதி. அவருக்கு வயது 34. இவர்களுக்கு சில தினங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து குடும்பக்கட்டுப்பாடு செய்வதற்காக வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சரஸ்வதி கைக்குழந்தையுடன் தன் கணவர் சிவாவின் சகோதரி சுமித்ரா(40) மற்றும் அவரது மகன் திருப்பதி(23) ஆகிய நால்வரும் வந்துகொண்டிருந்தனர்.

ALSO READ | ஒரே கட்டமாக நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் 

அப்போது திருப்பத்தூர் அருகே துரை நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது அரசு பேருந்தில் இரு சக்கர வாகனம் மோதி நிலைதடுமாறி நான்கு பேரும் கீழே விழுந்ததில் பேருந்தின் சக்கரம் சுமித்ராவின் தலைமீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

மற்ற மூவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பத்தூர் நகர காவல்துறை (TN Police) சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வாணியம்பாடி முதல் ஊத்தங்கரை வரை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திருப்பத்தூர் வாணியம்பாடி முக்கிய சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் தினம் ஒரு சாலை விபத்து நடப்பதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

ALSO READ | பிளாக்கில் மது கிடைக்காததால் ஆத்திரம்..! பார் ஊழியர் கொலை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News