வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவதியா? ஒவ்வொரு ராசிக்கும் உரிய பரிகாரங்கள்!

Get Rid From Loan Problems : வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என்று வருந்துபவர்கள், அதனை அவமானமாக நினைப்பவர்களுக்கான பரிகாரங்கள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 31, 2024, 01:42 PM IST
  • கடன் தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் தெய்வ வழிபாடு!
  • வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க விருப்பமா?
  • எந்த ராசிக்காரர்கள் எந்த கடவுளை வணங்குவது?
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவதியா? ஒவ்வொரு ராசிக்கும் உரிய பரிகாரங்கள்! title=

ஜோதிட சாஸ்திரப்படி, மனித வாழ்வில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் அனைத்திற்கும் பரிகாரங்கள் உண்டு. பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும், வாங்கிய கடனை திருப்பித்தர முடியாமல் கஷ்டப்படுவது என்பது மிகவும் அவமானத்தை ஏற்படுத்தும். இது ஒரு மனிதருக்கு வரக்கூடாத பிரச்சினைதான். ஆனால், தேவைக்காக கடன் வாங்குவதும், அதனை திருப்பிக் கொடுப்பதும் இயல்பானது. கட்டி விடலாம் என்று நினைத்து வாங்கியக் கடனை திருப்பித் தர முடியாமல் போவதற்குக் காரணமும் நமது நேரம் காலம் தான்.

சிலர் வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் போக்கு காட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என்று வருந்துபவர்கள், அதனை அவமானமாக நினைப்பவர்கள், சில ஜோதிட பரிகாரங்களை செய்தால் கடன் தொல்லைகள் தீரும்.

கடனை தீர்க்கும் பரிகாரங்கள்
வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் தவிப்பவர்கள், கொடுக்க வேண்டிய கடன் தொகையில் ஒரு சிறு பகுதியை மைத்ர முகூர்த்த நேரத்தில் திருப்பி கொடுத்தால் விரைவில் கடன் முழுவதும் திருப்பிக் கொடுக்கும் வகையில் வாய்ப்புகள் உருவாகும்.

மைத்ர முகூர்த்தம்

அஸ்வினி நட்சத்திரமும் மேஷ லக்னமும், அனுஷ நட்சத்திரமும் விருச்சிக லக்னமும் கூடிய காலத்திற்கு ‘மைத்ர முகூர்த்தம்’ என்று பெயர். இந்த முகூர்த்தத்தில் கடனின் ஒரு சிறு தொகையை கொடுத்தால் கொடுக்க வேண்டிய கடன் தொகை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் விரைவில் தீர்ந்துவிடும்.

செவ்வாயின் நட்சத்திரமும் சனிக்கிழமையும் இணைந்த நாளில் மேஷ, விருச்சிக லக்னத்திலும் கடனை தீர்க்கலாம். அதேபோல, செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாளில்,அதிலும் பிரதோஷ காலத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்கலாம். சூரிய, சந்திர கிரகணம் ஏற்பட்டு விலகும் சமயம் கடனை திருப்பித் தரலாம்.

மேலும் படிக்க | சிம்மத்தில் வக்ரமாகும் புதன்! 12இல் 5 ராசிகளுக்கு கெடுபலன்களைக் கொடுக்கும் புத்திகாரகர்!

கடன் தீர்க்கும் செவ்வாய் 

செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித்தரலாம். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க, ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமி நாளன்று குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.

லட்சுமி நரசிம்மர் வழிபாடு

லட்சுமி நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் தீராத கடன்கள் எல்லாம் தீரும்.ஒவ்வொரு ராசிக்கும் கடன்கள் அடைவதற்காக என்னென்ன செய்ய வேண்டும்,எதையெல்லாம் செய்ய கூடாது, எந்தெந்த கடவுளை வழிபடலாம் என பரிகாரங்கள் உள்ளன.

மேஷ ராசிக்கு கடன் தீர பரிகாரங்கள்: முருகன், ஆஞ்சநேயர், காவல் தெய்வங்கள் ஆகிய தெய்வங்களை வணங்கினால் வாங்கிய கடனை அடைப்பது சுலபமாக இருக்கும்.

ரிஷப ராசிக்கு கடன் தீர பரிகாரங்கள்: செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் ரிஷப ராசிக்காரர்கள் கடன் அடைப்பதை தொடங்கினால் சீக்கிரம் கடன் அடையும்

மிதுன ராசிக்கு கடன் தீர பரிகாரங்கள்: மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, மகாலட்சுமிக்கு தாமரை மலர் சார்த்தி வழிபாடு செய்தால் கடன் தொல்லைகள் நீங்கி நிம்மதி ஏற்படும். 

கடக ராசிக்கு கடன் தீர பரிகாரங்கள்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று முருகனை தரிசித்துவிட்டு வந்து கடனை அடைக்கத் தொடங்கினால் விரைவில் கடன் அடையும்.

மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; பண மழையில் நனையப் போகும் 3 ராசிக்காரர்கள்

சிம்ம ராசிக்கு கடன் தீர பரிகாரங்கள்: செவ்வாய் மற்றும் வியாழன் கிழமைகளில் கடன் அடைப்பதை தொடங்கினால் சீக்கிரம் கடன் அடையும்.

கன்னி ராசிக்கு கடன் தீர பரிகாரங்கள்: செவ்வாய் மற்றும் குரு ஹோரையில் கடன்களை அடைக்க தொடங்கினால் விரைவில் கடன் அடையும்.

துலாம் ராசிக்கு கடன் தீர பரிகாரங்கள்: கந்த குரு கவசம் சொல்லி முருகன் வழிபாடு செய்து, கடனை திருப்பிக் கொடுக்க தொடங்குவது நல்லது.  

விருச்சிகம் ராசிக்கு கடன் தீர பரிகாரங்கள்: விருச்சிக ராசிக்காரர்கள் புன்னைநல்லூர் முத்து மாரியம்மன் கோயிலுக்கு சென்று முத்துமாரியம்மனை தரிசித்து வந்த பின் கடனைத் திருப்பிக் கொடுக்கத் தொடங்கினால் கடன் தொல்லை விரைவில் தீரும்.

தனுசு ராசிக்கு கடன் தீர பரிகாரங்கள்: தனுசு ராசியின் அதிபதி குரு பகவான், தனாதிபதி சனி என்பதால், இருவரையும் வணங்கி, வியாழன் அல்லது சனிக்கிழமையில் கடனை திருப்பி அளிக்கத் தொடங்குங்கள்

கும்பம் ராசிக்கு கடன் தீர பரிகாரங்கள்: பைரவர் மற்றும் முருகன் கோவில்கள் சென்று வருவது நன்மை தரும்.

மகர ராசிக்கு கடன் தீர பரிகாரங்கள்: வளர்பிறையில் திங்கள், வியாழன் ஆகிய நாட்களிலும் - தேய்பிறையில் ஞாயிறு, வியாழன் ஆகிய நாட்களிலும் கடன் கொடுப்பதை, வாங்குவதை தவிர்ப்பது நல்லது. முருகன் வழிபாடு கடனைத் தீர்க்கும்.

மீன ராசிக்கு கடன் தீர பரிகாரங்கள்: முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுவதும், ஞாயிறு, செவ்வாய், புதன் கிழமைகளிலும் கடனை அடைப்பது நல்லது.

மேலும் படிக்க | எதிரும் புதிருமாய் ஏழாம் வீட்டில் தொடர்பு கொள்ளும் சனி-சூரியன்! சமசப்தக யோகம் பெறும் ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News