மாரிக்கே அதிர்ச்சி தரும் இன்றைய எபிசோட்! முத்துப்பேச்சி எடுத்த முடிவு

Mari Zee Tamil mega serial update: கொல்லப்பட்ட சாமியாடி, முத்துப்பேச்சி எடுத்த முடிவு, மாரிக்கு அதிர்ச்சி - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 19, 2023, 11:58 AM IST
  • கோவில் திருவிழாவை நடந்த குறி கேட்கும் மக்கள்
  • மாரி சீரியலில் பரபரப்பான திருப்பம்
  • முத்துப்பேச்சியின் பதிலடி என்ன தெரியுமா?
மாரிக்கே அதிர்ச்சி தரும் இன்றைய எபிசோட்! முத்துப்பேச்சி எடுத்த முடிவு title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான மாரி சீரியல், தெய்வத்தின் அருள் பெற்ற ஒரு பெண் மற்றும் அவரைச் சுற்றி நடக்கும் கதையாக புனையப்பட்டது. பல எதிர்பார்க்காத திருப்பங்களுடன் வெற்றி நடைபோடும் மாரி சீரியல், தொலைகாட்சி ரசிகர்களின் மனங்களில் இடத்தை பிடித்துள்ளது.

பரபரப்பான கதைக்களத்துடன் நகர்ந்து வரும் இந்த தொடரின் லேட்டஸ்ட் எபிசோடில் என்ன நடக்கும்?

நேற்றைய எபிசோட் 

கோவில் குளத்தின் அருகே சாமியாடி செத்து கிடக்கும் சாமியாடி! மாரி மீது விழும் பழி, முத்துப்பேச்சி கொடுத்த பதிலடி என பரபரப்புடன் நேற்றைய எபிசோட் இருந்தது.  ஜாஸ்மின், சங்கரபாண்டி மற்றும் ஊர் தலைவர் சதியால் குளத்தின் அருகே சாமியாடி செத்து கிடந்தார். இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

மேலும் படிக்க | மாரி சீரியல் அப்டேட்: பூட்டியிருந்த கோயிலை திறந்த மாரி-பஞ்சாயத்தை கூட்டிய சர்க்கரை!

அதாவது, ஊர் தலைவர் மாரி கோவிலை திறந்தது தான் இது எல்லாத்துக்கும் காரணம், இனிமே மாரி இந்த ஊரில் இருக்க கூடாது என சொல்ல ஊர் மக்களும் மாரிக்கு எதிராக மாறுகின்றனர். மேலும் கோவில் திருவிழாவை நடந்த குறி கேட்கிறார்கள். 

ஆனால், சாமியாடி இல்லை, இனி யார் சாமியாடி குறி சொல்வாங்க என கேட்க ஊர் பெரியவர்கள் முத்துப்பேச்சி அப்பா தான் முதல் முறையாக சாமியாடி குறி சொன்னது, அதனால் முத்துப்பேச்சியே குறி சொல்லட்டும் என்று சொல்ல அவரும் நான் இதை செய்கிறேன் என ஒப்பு கொள்கிறார். 

பிறகு முத்துப்பேச்சி அவரது அப்பா போட்டோ முன்பு நின்று எல்லாம் நல்லபடியாக நடக்கணும் என வேண்டி கொண்டிருக்க அங்கு வரும் மாரி எல்லாம் என்னால தான் என மன்னிப்பு கேட்கிறாள். ஆனால் முத்துப்பேச்சி உங்க மேல எந்த தப்பும் இல்லை என சொல்கிறார். 

மேலும் படிக்க | மாரி சீரியல் அப்டேட்: பூட்டியிருந்த கோயிலை திறந்த மாரி-பஞ்சாயத்தை கூட்டிய சர்க்கரை!

மறுபக்கம் ஊர் தலைவர் நாம ஒரு திட்டம் போட்டா அது வேற மாதிரி நடக்குது என புலம்ப ஜாஸ்மின், சங்கரபாண்டி ஆகியோர் முத்துப்பேச்சியையே கொன்னுடலாம் என முடிவெடுத்து அதற்காக அடியாள் ஏற்பாடு செய்கின்றனர். பிறகு மாரி தூங்கி கொண்டிருக்கும் போது அவளது சக்தியின் மூலம் முத்துப்பேச்சி உயிருக்கு ஆபத்து என தெரிய வருகிறது. 

உடனே சூர்யாவிடம் இந்த விசயத்தை சொல்ல இருவரும் முத்துப்பேச்சியிடம் வந்து உங்களுக்கு எதாவது ஆகிடுமோனு பயமா இருக்கு என சொல்ல அவர் எனக்கு என் பாட்டன், முப்பாட்டன் ஆசிர்வாதம் இருக்கு எதுவும் ஆகாது என சொல்கிறார். மாரி முத்துப்பேச்சியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என யோசிக்கிறாள். 

மேலும் சண்முகத்தின் மூலமாக முத்துப்பேச்சிக்கு யாரெல்லாம் எதிரி என்ற விசயங்களையும் கேட்டு அறிகிறாள் மாரி. 

காணத்தவறாதீர்கள்..

அடுத்ததாக நடக்க போவது என்பதை நேரடியாக பார்த்து தெரிந்துக் கொள்ள, மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்று இரவு 8 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | கொல்லப்படும் சாமியாடி! மாரி மீது பழி! முத்துப்பேச்சியின் பதிலடி - மாரி சீரியல் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News