கோவிட்-19 தொற்று எண்ணிக்கையில் அதிரடி ஏற்றம்: 2630-ஐ எட்டியது ஓமிக்ரான் எண்ணிக்கை

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 797, டெல்லியில் 465, ராஜஸ்தானில் 236, கேரளாவில் 234, கர்நாடகாவில் 226, குஜராத்தில் 204, தமிழ்நாட்டில் 121 என ஓமிக்ரான் தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 6, 2022, 10:50 AM IST
  • கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேர் புதிதாக கோவிட்-19 ஆல் பாதிப்பு.
  • நாட்டின் கோவிட்-19 மீட்பு விகிதம் தற்போது 97.81 சதவீதமாக உள்ளது.
  • இதுவரை 148.67 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
கோவிட்-19 தொற்று எண்ணிக்கையில் அதிரடி ஏற்றம்: 2630-ஐ எட்டியது ஓமிக்ரான் எண்ணிக்கை title=

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேர் புதிதாக கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர், 325 பேர் இறந்தனர். இதைத் தொடர்ந்து மொத்த இறப்பு எண்னிக்கை 4,82,876 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை (ஜனவரி 6, 2022) வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 2,85,401 ஆக உள்ளது.

 கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 71,397 அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  19,206 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்த மீட்பு எண்ணிக்கை 3,43,41,009 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் நேற்று புதிதாக 495 பேர் ஓமிக்ரான் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டது பதிவாகியுள்ளது. இது நாட்டில் மொத்த ஓமிக்ரான் (Omicron) பாதிப்பு எண்ணிக்கையை 2,630 ஆக உயர்த்தியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. குறைந்தது 995 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 797, டெல்லியில் 465, ராஜஸ்தானில் 236, கேரளாவில் 234, கர்நாடகாவில் 226, குஜராத்தில் 204, தமிழ்நாட்டில் 121 என ஓமிக்ரான் தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

ALSO READ | எச்சரிக்கையுடன் இருங்கள்; Omicron இன் ஒரு முக்கிய அறிகுறி இதுதான் 

தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரகாண்ட், சண்டிகர், ஜம்மு மற்றும் காஷ்மீர், உத்தரப் பிரதேசம், கோவா, இமாச்சலப் பிரதேசம், லடாக், மணிப்பூர் மற்றும் பஞ்சாப் என மொத்தம் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிய மாறுபாட்டான ஓமிக்ரானால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நாட்டின் கோவிட்-19 (COVID-19) மீட்பு விகிதம் தற்போது 97.81 சதவீதமாக உள்ளது. சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, சிகிச்சையில் உள்ள நோயாளிகள் மொத்த நோயாளிகளில் 1 சதவீதத்திற்கும் குறைவாக, 0.81 சதவீதமாக உள்ளனர்.

68.53 கோடி கோவிட்-19 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்றும் நாடு தழுவிய தடுப்பூசி (Vaccination) இயக்கத்தின் கீழ், இதுவரை  148.67 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

ALSO READ | Omicron: அறிகுறிகள் என்ன? எவ்வளவு நாட்களில் தெரியும்? முக்கிய தகவல்கள் இதோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News