உ.பி., மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பார்களில் நடனமாடும் பெண்களின் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டதை தனியார் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியுள்ளது.
பள்ளி முடிந்து மாணவர்கள் சென்றதும் காலியாக இருக்கும் பள்ளியை பாராக மற்றியுள்ளனர். இரவு நேரத்தில் உள்ளூர் ஆசாமிகள் சிலர் சேர்ந்து பள்ளியில் பார் அழகிகளை அழைத்து வந்து குத்தாட்டம் போட வைக்கின்றனர். அந்தப் பெண்களோடு சேர்ந்து அவர்களும் ஆட்டம் போடுகின்றனர்.
இந்த அட்டூழியத்தை அம்பலப்படுத்தும் வீடியோ ஒரு தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாரம் ஒரு முறை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களில் வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என சென்னை ஐகோர்ட் இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சமஸ்கிருதம் அல்லது வங்க மொழியில் பாட விருப்பமில்லாதவர்கள் தமிழில் மொழி பெயர்த்து பாடலாம். மேலும் இந்த வந்தே மாதரம் பாடல் திங்கட்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில் பாட வேண்டும்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளி மாணவர்களை பணையக்கைதிகளாக சிறை பிடித்து ஐ.எஸ் பயங்கரவாதிகள்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியான மார்வாய் நகரத்தில் ஐ.எஸ் ஆதரவு பயங்கரவாதிகள், பிலிப்பைன்ஸ் இராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று, பிலிப்பைன்ஸ் நாட்டின் பிக்காவயன் என்ற பகுதியில் செயல்பட்டு வரும் இராணுவ பள்ளிக்கூடம் ஒன்றில், புகுந்த 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பள்ளி மாணவர்களை சிறை பிடித்துள்ளனர். அவர்கள் ஐஎஸ் ஆதரவு பெற்ற பி.ஐ.எஃப்.எஃப். பயங்கரவாதிகள் என பிலிப்பைன்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி விதி எண் 110-ன் கீழ் அறிவித்துள்ளார்.
இதைக்குறித்து எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள் அறிவிப்பில் கூறியதாவது:-
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் போதிய கணினி திறன்களை அடையும் வகையில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. இதனையடுத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு இன்று இலவச பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி விருகம்பாக்கத்தில் நடைபெற்றது.
இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அவர் மாணவ - மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கினார்.
விழா நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
* தமிழக கல்வித்துறையில் பல புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும்.
சேலம் தனியார் பஸ்ஸில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இரவு 9 மணிக்கு சேலத்தில் இருந்து ஓமலூர் அருகே உள்ள நார்ணம்பாளையத்திற்கு ஒரு தனியார் பஸ் சென்றது. நேற்றிரவு 10 மணிக்கு அந்த பஸ் நார்ணம்பாளையம் சென்றடைந்தது. அப்பொழுது பஸ்சில் இருந்த பயணிகள் இறங்கி சென்றனர்.
ஆனால், சிறுமி பஸ்சுக்குள் வைத்து மணிவண்ணன், முருகன் மற்றும் பெருமாளிடம் உட்பட 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தனி விமானம் மூலம் கோவை வந்த பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் உதகை சென்றார். பிரணாப் முகர்ஜியை விமான நிலையத்தில் உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி, ஆட்சியர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
உதககையில் உள்ள லாரன்ஸ் பள்ளியின் 159-வது ஆண்டு விழா இன்று நடைப்பெறுகிறது. இந்த பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று உதகை வந்தடைந்துள்ளார். பிரணாப் முகர்ஜி வருகையை ஒட்டி உதகையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழ் மொழி கற்கும் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி சி.பி.எஸ்.இ. - ஐ.சி.எஸ்.இ. உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என திமுக கழக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதைக்குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை கூறியதாவது:-
சீனாவின் சுரங்கப்பாதையில் பள்ளிப்பேருந்து கவிழ்ந்து திடீர் விபத்திற்குள்ளானது. இதில் 12 பேர் உயிரிழந்தனர்.
சீனாவில் கிழக்குப்பகுதியில் உள்ள குயிங்டோவில் நகரில் இன்று பள்ளிப்பேருந்து ஒன்று சுரங்கத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அப்பேருந்தில் பயணித்த 10 குழந்தைகள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாங்டங் மாகாணத்தின் வெய்ஹாய் என்னும் இடத்தில் தங்கி படித்துவந்த அந்த குழந்தைகள் தென் கொரியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்கு வயது நான்கு முதல் ஏழு வரை மட்டுமே என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது.
டெல்லியின் துக்லகாபாத் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட ரசாயன வாயு கசிவு காரணமாக மாணவர்கள் 100 பேருக்கு திடீர் மயக்கமடைந்துள்ளனர்.
பள்ளி வளாகத்துக்கு அருகே உள்ள கன்டெய்னர் கிடங்கில் இருந்த ஒரு கன்டெய்னரில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு கண் எரிச்சல், மயக்கம் போன்ற உபாதகைகள் ஏற்பட்டது. இதனால் சுமார் 100 குழந்தைகள் மயக்கமடைந்தனர்.
மேலையூர் திருமங்கலக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி அமைந்துள்ளது. தற்போது இந்த பள்ளியில் மிக குறைந்த மாணவ, மாணவிகளே படிக்கின்றன. இந்நிலை தொடர்ந்தால் பள்ளி விரைவில் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. எந்தனையோ பேருக்கு வாழ்வு தந்த இந்த பள்ளி மூடப்படமால் இருக்க அனைவரும் ஓன்று சேர்ந்து தங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.
வீடியோ பார்க்க:
டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதைக் கட்டுப்படுத்தக் கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது. டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாணவ–மாணவிகளுக்கு இலவச சீருடை மற்றும் விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுகிறது.
தமிழ் நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் என மொத்தம் 56 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் உள்ளன. மே 1-ம் தேதியில் இருந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடந்த சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. அதன் தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளன.
www.cbseresults.nic.in, www.results.nic.in www.cbse.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடந்த சி.பி.எஸ்.இ. எனும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. அதன் தேர்வு முடிவுகள் இன்று நண்பகலில் வெளியாக உள்ளன. பகல் 2 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன என தகவல் வந்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. மே 4-ம் தேதி தொடங்கிய அக்னி வெயில் இன்றுடன் முடிவடைகிறது.
ஆனாலும் பகலில் அனல் காற்று வீசுவதால் வெப்பம் மக்களை வாட்டியெடுத்து வருகிறது. எனவே பள்ளிகளின் கோடை விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்படுமா என மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்ப்பில் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.