தென்தமிழகத்தில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது!!

Last Updated : May 11, 2019, 10:00 AM IST
தென்தமிழகத்தில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு!! title=

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது!!

அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் தமிழகத்தில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், கோவை, நீலகிரி, விருதுநகர், உள்பட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கோவை, நீலகிரி, விருதுநகர், நெல்லை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

 

Trending News