அடுத்த 5 ஆண்டு என்ன செய்ய வேண்டுமென்று கூறுங்கள். நான் செய்து முடிப்பேன்: மோடி வாக்குறுதி

உங்கள் காவல்காரன் விழிப்புடன் இருக்கிறார். நான் என்ன செய்ய வேண்டும் எனக் கூறுங்கள், அதை செய்வேன் என பிரதமர் மோடி வாக்குறுதி

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 10, 2019, 02:29 PM IST
அடுத்த 5 ஆண்டு என்ன செய்ய வேண்டுமென்று கூறுங்கள். நான் செய்து முடிப்பேன்: மோடி வாக்குறுதி title=

பிரதமர் நரேந்திர மோடி 2019 மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் ஆதரித்து நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அவரது சொந்த மாநிலமான குஜராத்தின் ஜுனாகார்க் பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக் கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்பொழுது அவர் பேசியதாவது, 

கடந்த 5 ஆண்டுகளாக என்ன வேலைகளை செய்தென் என்பதை குறித்து கூறவே இங்கு வந்திருக்கிறேன். அடுத்த 5 ஆண்டு நான் என்ன செய்யவேண்டுமென்று என்பதை அறிந்துக்கொள்ள நான் இங்கு வந்துள்ளேன். அதை கூறுங்கள். நான் செய்து முடிப்பேன்.

உங்கள் மகன், இந்த காவலாளி செய்த செயல்கள் உங்களுக்கு பெருமையாக உள்ளதா? ஊழலே இல்லாமல் நான் நடத்திய ஆட்சி உங்களை பெருமை படுத்துகிறதா? உங்கள் காவல்காரன் விழிப்புடன் இருக்கிறார்.

பயங்கரவாதத்தை அகற்றுவது பற்றி மோடி பேசும்போது, மோடியை அகற்றப்படுவதைப் பற்றி காங்கிரஸ் மற்றும் அதன் பங்காளிகள் பேசுகின்றனர். உங்கள் மகனும், காவலாளியுமான என்னை அகராதியில் உள்ள அனைத்து அவதூறான வார்த்தைகளையும் கூறி என்னை பேசி வருகின்றனர்.

Trending News