UPS vs NPS vs OPS: மத்திய அரசு சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக ஒரு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதிய முறை ஆகியவற்றின் சிறந்த அம்சங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கை
நீண்ட காலமாக, ஊழியர்கள் தேசிய ஓய்வூதிய முறையை (NPS) மேம்படுத்த வேண்டும் அல்லது பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று கோரி வந்தனர். மோடி அரசாங்கம் இதற்கு ஒரு மாற்று வழியை கண்டறிந்து, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) அறிமுகம் செய்தது. இந்த ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.
பழைய ஓய்வூதியத் திட்டம், தேசிய ஓய்வூதிய முறை மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள பிரத்யேகமான சிறப்பம்சங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம்
- பழைய ஒய்வூதியத் திட்டத்தில் பொது வருங்கால வைப்பு நிதிக்கான (GPF) ஏற்பாடு உள்ளது.
- ஓய்வு பெறும் நேரத்தில், ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் பாதியை ஓய்வூதியமாகப் பெறுகிறார்கள்.
- ஊழியர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பணிக்கொடை கிடைக்கும்.
- ஓய்வு பெற்ற ஊழியர் இறந்தால், அவரது குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடைக்கும்.
- ஓய்வூதியத்திற்காக ஊழியரின் சம்பளத்திலிருந்து எந்தப் பணமும் கழிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- 6 மாதத்திற்கு ஒரு முறை அகவிலை நிவாரணத்தில் திருத்தம் செய்யப்படுகின்றது.
National Pension System: தேசிய ஓய்வூதிய முறை
- தேசிய ஓய்வூதிய முறையில், ஊழியரின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10% கழிக்கப்படுகிறது.
- இந்தத் திட்டம் பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டது.
- ஆகையால் இதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கக்கூடும்.
- இதன் காரணமாக ஊழியர்கள் இதை பாதுகாப்பாக கருதுவதில்லை.
- ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் பெற, NPS நிதியில் 40% முதலீடு செய்ய வேண்டும்.
- ஓய்வுக்குப் பிறகு நிலையான ஓய்வூதியத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
- 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலை நிவாரணத்திற்கான எந்த வித ஏற்பாடும் இதில் இல்லை.
Unified Pension System: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்
- ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர் மீது ஓய்வூதியச் சுமை இருக்காது.
- இதில் நிலையான ஓய்வூதியத்திற்கான ஏற்பாடு உள்ளது.
- பணி ஓய்வுக்குப் பிறகு, கடைசி 12 மாதங்களின் சராசரி அடிப்படை சம்பளத்தில் 50% தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும்.
- ஊழியர் இறந்தால், ஓய்வூதியத்தில் 60% இறந்த ஊழியரின் மனைவி/கணவருக்கு வழங்கப்படும்.
- குறுகிய சேவைக் காலம் உள்ளவர்களுக்கு மாதத்திற்கு குறைந்தபட்சமான ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
- பணி ஓய்வுக்குப் பிறகு, பணிக்கொடையுடன் கூடுதலாகவும் மொத்த தொகை வழங்கப்படும்.
- 6 மாத சேவைக்கு, ஓய்வு பெறும் தேதியில், மாத சம்பளத்தில் (ஊதியம் + அகவிலைப்படி) 1/10 பங்கு வழங்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ