புதிய ரூ.,1000 நோட்டை ரிசர்வ் வங்கி வழகங்குகிறதா? வைரலாகும் புகைப்படம்!

புதிய ரூ 1000 நோட்டு? புதிய ரூ .1000 நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளதாகக் கூறி வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக பயன்பாடுகள் மற்றும் வலைத்தளங்களில் ஏராளமான செய்திகள் வெளியானது. 

Last Updated : Mar 9, 2020, 08:14 AM IST
புதிய ரூ.,1000 நோட்டை ரிசர்வ் வங்கி வழகங்குகிறதா? வைரலாகும் புகைப்படம்! title=

புதிய ரூ .1000 நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளதாகக் கூறி வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக பயன்பாடுகள் மற்றும் வலைத்தளங்களில் ஏராளமான செய்திகள் வெளியானது. இப்போது, இந்த வைரல் செய்திகளுக்கு பதிலளித்து, பிஐபி ஃபேக்ட் செக்கின் (PIB Fact Check's), இந்த செய்தி போலியானது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது!

இது தொடர்பாக பிஐபி ஃபேக்ட் செக்ஸ் (PIB Fact Check's) கூறியதானது., "ரிசர்வ் வங்கி புதிய 1000 ரூ. நோட்டை வெளியிட்டுள்ளது என்ற கூற்று சமூக ஊடகங்களில் பரவி வந்த செய்தி போலி வதந்தியாகும்."

"புழக்கத்தில் இருக்கும் படம் மற்றும் கூறப்பட்ட கூற்று போலியானது, அதற்கான அறிவிப்பு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை," என்று பிஐபி ஃபேக்ட் செக்ஸ் (PIB Fact Check's) தெரிவித்துள்ளது. 

 

 

முன்னதாக, பிப்ரவரி 26 அன்று, செய்தி நிறுவனமான ஐ.ஏ.என்.எஸ்., நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் புதன்கிழமை ரூ .2000 மதிப்புள்ள நோட்டுகளை வெளியிடுவதை நிறுத்துவது குறித்து வங்கிகளுக்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை.

"எனக்கு தெரிந்தவரையில், அத்தகைய அறிவுறுத்தல்கள் வங்கிகளுக்கு வழங்கப்படவில்லை (ரூ .2000 நோட்டுகளை வெளியிடுவதை நிறுத்துவது), "பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் அவர் கூறினார்.

ரூ .2,000 நோட்டுகளில் இருந்து ஏடிஎம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டதாகவும், மிகப் பெரிய நாணய மதிப்பு சட்டப்பூர்வ டெண்டராக இருக்கும் என்றும், ஆனால் படிப்படியாக பொது புழக்கத்தில் இருந்து வெளியேறும் என்றும் அமைச்சரின் கருத்துக்கள் வந்துள்ளன.

Trending News