Provident Fund: சம்பளம் வாங்குபவர்களுக்கு, வருங்கால வைப்பு நிதியின் தொகை அவர்களின் வாழ்நாள் வருமானமாகும். இபிஎஃப்ஓ தொடர்பான விதிகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
PPF Tax Saving: பிபிஎஃப்-இல் முதலீடு செய்பவர்கள் உறுதியான வருமானத்தைப் பெறுவது மட்டுமின்றி, 1.5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீடுகளுக்கு வருமான வரியின் 80C பிரிவின் கீழ் வருமான வரி விலக்கும் கிடைக்கும்.
கொரோனா ஊரடங்கினால் வேலையிழந்த பணியாளர்களின் பி.எப் பங்களிப்பு தொகையை அடுத்த 2022 ஆம் ஆண்டு வரை அரசு செலுத்தும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala sitharaman) தெரிவித்துள்ளார்.
EPFO alert: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPF) சந்தாதாரர்களாக இருக்கும் அரசு அல்லது தனியார் துறை ஊழியர்கள் 2021 செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் தங்கள் ஆதார் அட்டையை தங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) கணக்குகளுடன் இணைக்க வேண்டும்.
EPFO இன் புதிய விதிகளின்படி, EPFO-ல் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்கள் UAN எண்ணை ஆதார் உடன் இணைக்க வேண்டும். தங்கள் ஊழியர்கள் ஆதாருடன் பி.எஃப் கணக்கை இணைத்து விட்டார்களா என்பதை சரிபார்க்க வேண்டியது முதலாளிகள் / நிறுவனங்களின் பொறுப்பாகும்.
ஊதிய கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களால் மாதா மாதம் ஊழியர்களின் கையில் கிடைக்கும் ஊதியத்தின் அளவு குறைந்தாலும், அவர்களது பி.எஃப் மற்றும் கிராஜுவிட்டியில் அதிகரிப்பு ஏற்படும்.
அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி வகையின் கீழ் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றைக் கொண்டு வருவது குறித்து விவாதிக்க விரும்புவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறினார்.
புதுடெல்லி: Provident Fund: புதிய ஊதியக் குறியீடு (The New Wage Code) கடந்த பல நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது, இது குறித்து ஊடக அறிக்கைகளில் அதிகம் எழுதப்பட்டு கூறப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை மத்திய அரசிடமிருந்து முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை. புதிய ஊதியக் குறியீடு நடைமுறைப்படுத்தப்படும் போதெல்லாம், அது தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு பெரும் செல்வமாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. புதிய ஊதியக் குறியீடு, ஊழியரின் அடிப்படை சம்பளம் அவரது CTC-யில் 50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்காது என்று கூறுகிறது. இது ஊழியரின் EPF (Employees Provident Fund) அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பலர் ஓய்வு பெறுவதற்கு முன்பே தங்கள் பணியில் இருந்து விலகி விடுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் பணியாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு (EPF Account) என்ன நடக்கும் என்ற கேள்வி எழுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.