ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வேன் ஒன்று மற்றொரு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 6 மாணவர்கள் மற்றும் வேன் ஒட்டுனர் காயமடைந்தனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது.
பாத்தோவில் இருந்து கே.வி. ஸ்கூல், செனானி, கான்வென்ட்டின் மாணவ மாணவிகள் சென்ற வேன், படோவில் மற்றொரு வாகனம் மீது மோதியது.
இச்சம்பவத்தில் காயமடைந்த ஓட்டுனர் முஷ்டாக் அகமது, மற்றும் மாணவர்கள் சிகிச்சைக்காக சமுதாய நல மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
திருச்சி மலைக்கோட்டை அருகே 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்ப்பட்டுள்ளது. கட்டட இடிபாட்டிற்குள் 6 குடும்பங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து நேற்று இரவு பெய்த மழை காரணமாக ஏற்ப்பட்டுள்ளது.
மீட்பு பணிகளில் போலீசார், தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். இடிந்த கட்டடத்தில் 6 வீடுகளில் குடும்பங்கள் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இன்று காலை 6 மணிக்கு இடிந்து விழுந்த கட்டடத்தில் இருந்து கார்த்திகா என்ற பெண் பலத்த காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இரயில் விபத்தில் துண்டிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கரத்தினை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் சேர்த்துவைத்து மருத்துவர்கள் சாதித்தனர்.
பிரான்சில் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையானது, பிரான்ஸ் மறுத்துவர்கள் மூலம் செய்யப்பட்ட முதல் முயற்சியாகும். இந்த அறுவை சிகிச்சையானது நான்கு மணிநேரம் தொடர்ந்து நடைபெற்றது.
தென்கிழக்கு பிரான்சில் உள்ள மைய மருத்துவமனையான யுனிவெர்சிட்டி கிரேநோப்ல் அல்பெஸ் மருதுவமனியின் இரண்டு மருத்துவர்கள் குழு இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தினர்.
பங்களாதேஷை சேர்ந்த 40 வயதுடைய பெண்மணி ஒருவரின் காலின் எடை மட்டும் 60 கிலோவை தாண்டியது. இவர் யானைக்கால் நோயால் பதிக்கப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
டெய்லி மெயிலின் அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவர் ரெஜியா பேகம் எனவும், 18 ஆண்டுகளுக்கு முன்பு தனது இரண்டாவது மகள் பிறப்பினை தொடர்ந்து அதுமுதல் இந்த நோயாள பாதிக்கப்பட்டுள்ளார்.
ரெஜியா பேகமின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்பதில் அவர் தெளிவாக இல்லை என்றாலும், அவளுடைய உறவினர்கள் இவரை ஒதுக்கி வைத்திருப்பது மனஉளைச்சலை தருவதாக கூறுகிறார்.
விழுப்புரத்தில் டிராக்டர் ஒன்றின் மீது ரயில் வண்டி எஞ்சின் மோதியது.
விழுப்புரம் மாவட்டம் மெல்னரியப்பனூரில் டிராக்டர் ஒன்றின் மீது ரயில் என்ஜின் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த வித உயிரிழப்பு, காயமோ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
Train engine hits a tractor in Melnariyappanur(Vilupuram). No Injuries #TamilNadu
ரக்ஷா பந்தன் பண்டிகை நாளில் தனது சகோதரன் நலமுடன் வாழவேண்டும் என்பதை வலியுறுத்தி அவருடன் பிறந்த சகோதரிகள் கையில் ராக்கி கட்டி விடுவார்கள்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்தர் குமார் என்பவர் தனது சகோதரி உடன் ரக்ஷா பந்தன் கொண்டாட நேற்று ஹரியானா மாநிலம் சென்றுள்ளார். இதையடுத்து, இரவு பானிபட் மாவட்டத்திற்கு செல்லும் வழியில் ரயிலானது ஒரு ரயில் நிலையத்தில் நின்றுள்ளது.
சென்னை அண்ணாசாலையில் அரசுப் பேருந்து ஒன்று கம்பத்தில் மோதிஎதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை அண்ணாசாலையில் காலை முதலே வாகனங்கள் பரபரப்பாக சென்று கொண்டிருந்தன. அப்போது சென்னை சென்ட்ரலை நோக்கி, மேற்கு சைதாப்பேட்டையிலிருந்து வந்த அரசுப் பேருந்து ஒன்று சென்னை ஸ்பென்சர் பிளாசா அருகே திடீரென தன்கட்டுப்பாட்டை இழந்தது சாலையில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையில் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில், பேருந்தின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது. 6 பெண்கள் உள்பட 8 பேர் இக்கோர விபத்தில் படுகாயமடைந்தனர். பின் அவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சீனாவின் சுரங்கப்பாதையில் பள்ளிப்பேருந்து கவிழ்ந்து திடீர் விபத்திற்குள்ளானது. இதில் 12 பேர் உயிரிழந்தனர்.
சீனாவில் கிழக்குப்பகுதியில் உள்ள குயிங்டோவில் நகரில் இன்று பள்ளிப்பேருந்து ஒன்று சுரங்கத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அப்பேருந்தில் பயணித்த 10 குழந்தைகள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாங்டங் மாகாணத்தின் வெய்ஹாய் என்னும் இடத்தில் தங்கி படித்துவந்த அந்த குழந்தைகள் தென் கொரியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்கு வயது நான்கு முதல் ஏழு வரை மட்டுமே என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது.
ஒரு துரதிருஷ்டவசமான சம்பவத்தில், சுமார் 30-க்கு மேற்பட்ட வாகனங்கள் ஒன்று மீது ஒன்று மோதி ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் பனியின் காரணத்தால் விபத்து ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் குந்தாபூரில் நடந்த சாலை விபத்தில் பள்ளி மாணவிகள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பைந்தூரில் இருந்து குன்டாபூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, டான் பாஸ்கோ பள்ளி மாணவ-மாணவிகள் ஏற்றிக் கொண்டு சென்ற மாருதி ஆம்னி வேன் மீது நேருக்கு நேர் மோதியதில்,பள்ளி மாணவிகள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 12 மாணவ-மாணவிகள் படுகாயமடைந்தனர். விபத்துக்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருக்கும் போது எதிர்புறத்தில் வேகமாக வந்த லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து லாரி சென்டர் மீடியனைத் தாண்டி எதிரே வந்து பேருந்து மீது பயங்கரமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஒரு காரும் சிக்கிக் கொண்டது. மோதிய வேகத்தில் வாகனங்கள் சிதறியடிக்கப்பட்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.