மக்கள் பிராத்தனை மறுபிறவி எடுத்துள்ளேன் - ஜெயலலிதா

Last Updated : Nov 14, 2016, 11:01 AM IST
மக்கள் பிராத்தனை மறுபிறவி எடுத்துள்ளேன் - ஜெயலலிதா title=

தமிழக மக்களின் தொடர் பிராத்தனைகளாலும் வேண்டுதல்களாலும் தான் மறுபிறவி எடுத்துள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் நடைபெறும் நான்கு தொகுதிகளுக்கான தேர்தலில் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது:- மக்கள் பிராத்தனையால் மறு பிறவி எடுத்துள்ளேன், வழக்கமான பணிகள் ஈடுபட காத்திருக்கிறேன், ஓய்வு நான் அறியாதது, உழைப்பு என்னை நீங்காது. மக்களின் பேரன்பு இருக்கும் வரை தனக்கு எந்த குறையும் வந்துவிடாது என்றும் கடவுளின் உதவியை கொண்டு வெகு விரைவில் பூரண நலத்துடன் திரும்பி வந்து பணிகளில் ஈடுபடுவேன் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Trending News