கலைஞர் உரிமைத் தொகை : தமிழ்நாடு அரசின் டபுள் குட்நியூஸ்..!

Kalaignar Magalir Urimai Thogai | கலைஞர் உரிமைத் தொகை எதிர்பார்க்கும் பெண்களுக்கு டபுள் குட் நியூஸ் வெளியாகியுள்ளது.

இதுவரை கலஞைர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) கிடைக்காதவர்களுக்கு டபுள் குட் நியூஸ் வெளியாகியுள்ளது. அது என்ன என்பதன் முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.

1 /8

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai) மூலம் சுமார் 1 கோடியே 15 லட்சம் பெண்கள் பயனாளிகளாக இருக்கின்றனர். இன்னும் தகுதி வாய்ந்த சில ஆயிரம் பெண்கள் கலைஞர் உரிமைத் தொகை கிடைக்காமல் உள்ளனர்.

2 /8

அவர்கள் நீண்ட நாட்களாக கலைஞர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். சிலர் புதிதாக விண்ணப்பிக்க தயாராக உள்ளனர். அதற்கு ஏற்ப தமிழ்நாடு அரசும் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. 

3 /8

இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர விரும்பிய பெண்களுக்கு மிகப்பெரிய குட் நியூஸ். அதேநேரத்தில் தமிழ்நாடு அரசு கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகளாக இருப்பவர்களில் தகுதியில்லாதவர்களையும் அடையாளம் கண்டு வருகிறது. 

4 /8

இறந்தவர்கள் பட்டியலை தயார் செய்து அவர்களது பெயரை நீக்கும் தமிழ்நாடு அரசு, கூடவே தகுதியில்லாதவர்களையும் கண்டுபிடித்து நீக்கிக் கொண்டிருக்கிறது. அதன்படி அண்மையில் சுமார் 1 லட்சத்து 16 ஆயிரம் பெண்கள் இந்த திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.   

5 /8

இதனால் தமிழ்நாடு அரசுக்கு நிதிச் சுமை குறைந்திருக்கும் அதேவேளையில் புதிய பயனாளிகளை சேர்ப்பதும் எளிதாகியுள்ளது. அதிகபட்சம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் முதல் 2 லட்சம் பயனாளிகள் வரை புதிதாக சேர்க்கப்பட வாய்ப்பு இருக்கிறது. 

6 /8

எனவே இதுவரை கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்காதவர்கள், இந்த திட்டத்தின் அனைத்து விதிமுறைகளையும் நிறைவு செய்பவராக இருந்தால் கட்டாயம் இந்த திட்டத்துக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். 

7 /8

ஒருவேளை ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டிருந்தால் மேல்முறையீடு செய்யலாம். மேல் முறையீடு செய்யாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். ஆனால், ஏற்கனவே உங்கள் விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது?, அந்த காரணங்கள் உண்மை இல்லை என்பதற்கான ஆதாரம் ஆகியவற்றை நீங்கள் சமர்பிக்க வேண்டும். 

8 /8

எனவே, கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் முன் இந்த திட்டத்தின் அடிப்படை தகுதிகளை நிறைவு செய்கிறீர்களா? என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இது உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படாமல் இருப்பதற்கு உதவும்.