Go First நிறுவனத்தை தொடர்ந்து சிக்கலில் SpiceJet... NCLT அனுப்பிய நோட்டீஸ்!

கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் சுமார் 11,0003 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் விமானம் அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை தொடர்பாக, தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NCLT ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 9, 2023, 05:30 PM IST
  • கோ பர்ஸ்ட் நிறுவனத்தை தொடர்ந்து ஸ்ஜெட் விமானமும் சிக்கலில் உள்ளது.
  • ஸ்பைஸ் ஜெட் விமானம் அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை தொடர்பாக, தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
  • விமான நிறுவனமான GoFirst மே 15 வரை டிக்கெட் விற்பனையை நிறுத்தியது.
Go First நிறுவனத்தை தொடர்ந்து சிக்கலில் SpiceJet... NCLT அனுப்பிய நோட்டீஸ்! title=

புதுடெல்லி: திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள "கோ ஃபர்ஸ்ட்" விமான நிறுவனம், மறு உத்தரவு வரும் வரை நேரடி டிக்கெட் முன்பதிவு மற்றும் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (DGCA) உத்தரவிட்டுள்ளது. விமான சேவையை தொடர்ந்து இயக்க முடியாதது மற்றும் போதுமான சேவைகளை வழங்க முடியாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு அந்த நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நேட்டீஸ் அனுப்பி உள்ளது. 15 நாள்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் சுமார் 11,0003 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் சிக்கித் தவிக்கிறது. மேலும், நிறுவனத்திற்கு 10 ஆயிரம் கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, கடந்த 3ம் தேதி முதல் விமான சேவை ரத்து செய்யப்பட்டு வருகிறது.

கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் விளக்கத்தைத் தொடர்ந்தே, அந்நிறுவனம் தொடர்ந்து விமான சேவையை வழங்குவதற்கு அனுமதிக்கப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, திவால் நடவடிக்கையை தொடங்கும் வகையில் தில்லியில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீா்ப்பாயத்தில் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இருப்பினும், கோ ஃபர்ஸ்ட் என்று கேட்டபோது, ​​அவர் எதுவும் சொல்ல மறுத்துவிட்டார். முன்னதாக, விமான நிறுவனமான GoFirst மே 15 வரை டிக்கெட் விற்பனையை நிறுத்தியது. மே 12 வரை விமானங்களையும் ரத்து செய்தது. குறிப்பிடத்தக்க வகையில், விமான நிறுவனம் NCLT முன் திவால் நடவடிக்கையை ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளதோடு, அதை முன்கூட்டியே விசாரணைக்கு கோரியுள்ளது.

மேலும் படிக்க | அடுத்த 2 நாட்களுக்கான விமானங்கள் அனைத்தையும் ரத்து செய்த Go First ஏர்லைன்ஸ்!

இந்நிலையில், ஸ்ஜெட் விமானமும் சிக்கலில் உள்ளது. ஸ்பைஸ் ஜெட் விமானம் அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை தொடர்பாக, தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NCLT ) திங்கள்கிழமை விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிலுவைத் தொகையை செலுத்தவில்லை எனக் கூறும் மனுவுக்கு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏப்ரல் 28 ஆம் தேதி விமான குத்தகை நிறுவனமான ஏர்கேஸில் ( Aircastle) மனு தாக்கல் செய்தது. இருப்பினும், இந்த விசாரணையானது தங்கள் விமானங்களை பாதிக்கப் போவதில்லை என்று ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. உண்மையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு கடன் வழங்கும் நிறுவனமான ஏர்காஸ்டில், ஸ்பைஸ்ஜெட்டுக்கு எதிராக இந்த திவால் செயல்முறையைத் தொடங்க ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளது. 

குறைந்த கட்டண விமான நிறுவனமான Aircraft Lesser Aircastle (Ireland) Limited நிறுவனத்திடன் பெற்ற கடன் தொகை தவிர, ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு எதிராக மேலும் இரண்டு நிறுவனங்கள் திவால் நடவடிக்கைக்கு விண்ணப்பித்துள்ளதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. இது வில்லிஸ் லீஸ் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (Willis Lease Finance Corporation) மற்றும் ஏக்கர்ஸ் பில்ட்வெல் பிரைவேட் லிமிடெட் ஆகியவை. வில்லிஸ் லீஸ் ஏப்ரல் 12 அன்று விண்ணப்பித்த நிலையில், ​​ஏக்கர்ஸ் பில்ட்வெல் (Acres Buildwell Private Ltd ) பிப்ரவரி 14 அன்று விண்ணப்பித்தது. இது தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

மேலும், கோ ஃபர்ஸ்ட் விமானம் நெருக்கடி காரணமாக, ​​விமானப் பயணிகளின் சிரமம் அதிகரித்துள்ளது. கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் தனது அனைத்து பட்ஜெட் விமான சேவைகளையும் மே 12 வரை ரத்து செய்த பின், சில குறிப்பிட்ட விமான வழி தடங்களில் விமானக் கட்டணம் வேகமாக உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கோ ஃபர்ஸ்ட் சுமார் 53 விமானங்களை கொண்டு இந்தியாவில் சுமார் 34 இடங்களுக்கு விமான போக்குவரத்து சேவையை அளித்து வருகிறது. இதோடு தினமும் சராசரியாக 200க்கும் மேற்பட்ட விமான பயணங்களை கோ பர்ஸ்ட் மேற்கொண்டு வருகிறது. இந்த விமானக் கட்டண உயர்வு நீண்ட காலத்திற்கு தொடரும் என்று தொழில்துறையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க | Go First நெருக்கடியால் எகிறும் கட்டணங்கள்! அதிர்ச்சியில் விமான பயணிகள்!

மேலும் படிக்க | 55 பயணிகளை ‘விட்டு’ சென்ற Go First விமானம்! ரூ.10 லட்சம் அபராதம் விதித்த DGCA

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News