அட…. இந்த பாட்டரில சார்ஜ் செஞ்சா அடுத்த 28,000 ஆண்டுகளுக்கு சார்ஜே செய்ய வேண்டாமா!!

தொலைபேசி, எலக்ட்ரிக் கார், வாட்ச் அல்லது வேறு எதையுமே வாழ்நாள் முழுவதும் சர்ஜ் செய்ய வேண்டாம். இந்த பேட்டரியை கலிபோர்னியாவைச் சேர்ந்த 'NDB' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 10, 2020, 05:22 PM IST
  • சூப்பர் பேட்டரியை கலிபோர்னியாவைச் சேர்ந்த 'NDB' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
  • இந்த பேட்டரி தானாகவே தனக்குள்ளேயே மின்சாரத்தை உருவாக்குகிறது.
  • இந்த பேட்டரிகளின் ஆயுட்காலத்தை 28000 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகரிப்பதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அட…. இந்த பாட்டரில சார்ஜ் செஞ்சா அடுத்த 28,000 ஆண்டுகளுக்கு சார்ஜே செய்ய வேண்டாமா!!  title=

புதுடில்லி: உங்கள் ஃபோனில் ஒரு பேட்டரியை பொருத்தினால், அதன் பிறகு பல ஆண்டுகளுக்கு நீங்கள் உங்கள் ஃபோனை சார்ஜ் (Phone Charge) செய்ய வேண்டி இருக்காது என்றால் எப்படி இருக்கும்?

இப்போது நிஜமாகவே அப்படி ஒரு பேட்டரி உருவாக்கப்பட்டுள்ளது. இது உங்கள் தொலைபேசியில் செருகப்பட்டால், நீங்கள் பல ஆண்டுகளுக்கு தொலைபேசியை சார்ஜ் செய்ய வேண்டியதில்லை. தொலைபேசி, எலக்ட்ரிக் கார், வாட்ச் அல்லது வேறு எதையுமே வாழ்நாள் முழுவதும் சர்ஜ் செய்ய வேண்டாம். இந்த பேட்டரியை கலிபோர்னியாவைச் (California) சேர்ந்த 'NDB' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இது ஒரு சுய-சார்ஜிங் பேட்டரி என்று கூறப்படுப்படுகிறது. ஏனெனில் ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்டால், அதன் பிறகு சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. குறைந்தது 28,000 ஆண்டுகளுக்கு சார்ஜ் செய்யத் தேவை இருக்காது. NDB, செயற்கை வைரத்தின் (Artificial Diamond) ஒரு சிறிய பெட்டியில் கார்பன் -14 அணுக்கழிவுகளை (Nuclear Waste) வைத்து இதை செய்துள்ளது.

மின்சார வாகனங்கள், செல்லுலார் தொலைபேசிகள், கடிகாரங்கள், மடிக்கணினிகள், கேமராக்கள், மானிட்டர்கள், சென்சார்கள் போன்ற பல வகையான சாதனங்களை இந்த பேட்டரி மூலம் சார்ஜ் செய்யலாம் என்று NDB கூறுகிறது. இந்த பேட்டரியின் பயன்பாடு மிகவும் பரவலாக உள்ளது. இந்த பேட்டரி முற்றிலும் பாதுகாப்பானது என்றும் நிறுவனம் கூறுகிறது. இதற்காக, கதிரியக்க வைர எதிர்ப்பு பூச்சு அதன் மீது பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கசிவைத் தடுக்கிறது.

ALSO READ: இந்த ஆண்டு இறுதிக்குள் 10 மில்லியன் மலிவான Android Smartphone அறிமுகப்படுத்தும் Jio

இது எப்படி வேலை செய்கிறது?

இந்த பேட்டரி தானாகவே தனக்குள்ளேயே மின்சாரத்தை உருவாக்குகிறது. கதிரியக்க எதிர்ப்பு வைரங்களின் விஷயத்தில் கதிரியக்க கூறுகள் காரணமாக உருவாகும் எலக்ட்ரான்கள் இதற்குக் காரணம். ஊடக அறிக்கையின்படி, இந்த பேட்டரிகளின் ஆயுட்காலத்தை 28000 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகரிப்பதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் கணினி சில்லுகள் மற்றும் மிகச் சிறிய சாதனங்களில் இதைப் பயன்படுத்தலாம். எதிர்காலத்தில், நிறுவனம் கார்பன் 14 இன் தூய அளவைப் பயன்படுத்தி இதை அடையக்கூடும்.

பேட்டரி ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் வழங்கும்

உலகெங்கிலும் 33 மில்லியன் கன மீட்டர் அணுக்கழிவுகள் உருவாகின்றன. அதைக் கண்டுபிடிக்க சுமார் 100 பில்லியன் டாலர்கள் செலவாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. கதிரியக்கக் கழிவுகளை குவிப்பது மற்றும் மாற்றுவது சிக்கனமானது அல்ல. காலப்போக்கில் NDB இந்த பேட்டரியை வீடுகளில் உள்ள மின்சார தேவைகளுக்கு பயன்படுத்த விரும்புகிறது. மேலும் மீதமுள்ள மின்சாரத்தை கிரிட்டுகளுக்கு பயன்பட விற்கவும் திட்டமிட்டுள்ளது.

சுகாதாரத் துறையில் பெரிய பயன்பாடு

இந்த பேட்டரியின் மிகப்பெரிய பயன்பாடு சுகாதாரத் துறையில் இருக்கும். எடுத்துக்காட்டாக, இதயமுடுக்கிகள் (Pacemaker) மற்றும் உறுப்பு மாற்று (Organ Transplant) சிகிச்சைகளின் போது இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவற்றால் தொடர்ந்து பேட்டரியை மாற்ற வேண்டிய அவசியம் அகற்றப்படும். 

ALSO READ: Vi திட்டங்கள்: 5 சிறந்த Vi நீண்ட கால திட்டங்கள்....

Trending News