தூய்மை இந்தியா: அனைவரும் பங்களிக்க வேண்டும் -மோடி

Last Updated : Oct 1, 2016, 02:07 PM IST
தூய்மை இந்தியா: அனைவரும் பங்களிக்க வேண்டும் -மோடி  title=

தூய்மை இந்தியா திட்டம் துவங்கப்பட்டு, நாளையுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. இத்திட்டம் துவங்கப்பட்ட நாளான அக்டோபர் 2-ம் தேதி, அனைவரும் தூய்மை பணியில் ஈடுபட வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பக்கத்தில்:- அனைவருக்கும் எனது நவராத்திரி நல்வாழ்த்துக்கள். இந்த அக்டோபர் 2-ம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைவரும் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தூய்மை பணியில் ஈடுபடும் உங்களின் புகைப்படங்களை நரேந்திர மோடி ஆப்ஸ் மூலம் பகிருங்கள். உங்களின் இந்த முயற்சி பலருக்கும் முன்னோடியாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

 

 

Trending News