பழங்களை எந்த நேரத்தில் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது...? ஊட்டச்சத்து நிபுணர் சொல்லும் டிப்ஸ்

Health Tips In Tamil: வாழைப்பழம், ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை எந்த நேரத்தில் சாப்பிட்டால் உடலுக்கு நன்மைகள் அதிகம் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் கூறும் கருத்துகளை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 15, 2024, 08:41 AM IST
  • பழங்களில் நீர்ச்சத்து அதிகம் கிடைக்கும்.
  • பழங்களில் வைட்டமிண்கள் நிறைந்திருக்கின்றன.
  • நார்ச்சத்தும் பழங்களில் அதிகம் காணப்படுகிறது.
பழங்களை எந்த நேரத்தில் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது...? ஊட்டச்சத்து நிபுணர் சொல்லும் டிப்ஸ் title=

Health Tips In Tamil: பழங்கள் உடல்நலனுக்கு பலவகை ஊட்டச்சத்தை ஒரே நேரத்தில் வழங்கும் தன்மை கொண்டது. பழங்களில் வைட்டமிண்கள், கனிமங்கள், ஆண்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கின்றன. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும். எனவே தான், பழங்களை தினந்தோறும் சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. 

பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதால் அதிக கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்தான நோய்களை தவிர்க்கலாம். இருப்பினும், பழங்களை சாப்பிடுவதற்கு என சரியான நேரம் இருக்கிறது. எந்த உணவாக இருந்தாலும் அது அதிக ஊட்டச்சத்தை கொண்டிருந்தாலும் சரி அவற்றை தவறான சூழலில் சாப்பிட்டால் உடல்நலனுக்கு பாதிப்பு ஏற்படும். அதே கதைதான் பழங்களுக்கும்...

பழங்கள் ஊட்டச்சத்தை அளித்தாலும் கூட அவற்றை சாப்பிடுவதற்கு என தனி நேரம், காலம் இருக்கிறது. அந்த வகையில், பழத்தை எப்போது சாப்பிடலாம் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் தெரிவித்த கருத்துகளை இங்கு விரிவாக காணலாம். இதுககுறித்து இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ் விவரித்துள்ளார். அதாவது, ஆப்பிள், வாழைப்பழம், தர்பூசணி, அவகாடோ, மாம்பழம், அன்னாசிப்பழம் உள்ளிட்டவற்றை ஒருநாளின் மற்ற நேரங்களை விட காலை நேரத்தில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். இதற்கான காரணங்களை இங்கு காணலாம். 

மேலும் படிக்க | இந்த 5 உணவுகளை சாப்பிட்டால்... உடனே தண்ணீர் குடிக்காதீங்க...

1. வைட்டமிண் மற்றும் கனிமங்கள்

பழங்களை காலையில் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு வைட்டமிண், கனிமங்கள் போதுமான அளவுக்கு விரைவாகவே கிடைக்கும். இதனால் நாள் முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சி உடன் இருக்கலாம். செய்யும் வேலையில் முழு கவனம் செலுத்த முடியும். 

2. நீர்ச்சத்து கிடைக்கும்

தர்பூசணி போன்ற நீர்ச்சத்து கொண்ட பழங்களை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு போதுமான நீர்ச்சத்து கிடைக்கும். இதனால் செரிமானம் முதல் பல்வேறு நலன்கள் காலையிலேயே உடலுக்கு கிடைக்கும். 

3. செரிமானம்

பழங்களில் அதிக நார்ச்சத்து இருக்கிறது. நார்ச்சத்து செரிமானத்திற்கும், ஆரோக்கியமான குடலுக்கும் முக்கியமானது. பழங்களை காலையில் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் உடனே வெளியேறும். இது காலையிலேயே உடலை குதுகலமாக வைத்திருக்க உதவும். 

4. உடல் எடை குறைப்பு

உடல் எடை குறைப்பில் ஈடுபடுவர்கள் பழங்களை காலையிலேயே சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக்கொள்ளலாம். உடற்பயிற்சிகளுக்கு பின்னர் சரியான ஊட்டச்சத்துக்களை கொண்ட பழங்களை எடுத்துக்கொண்டால் உடல் எடை குறைப்பில் பெரிய நன்மையை அளிக்கும். இயற்கையாகவே அதில் இனிப்புகள் இருப்பதால், செயற்கை இனிப்புகள் நோக்கி உங்களுக்கு ஆர்வம் செல்லாது. பழங்களில் கலோரிகள் மிக மிக குறைவு. இதனால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் காலையிலேயே பழங்களை எடுத்துக்கொள்ளலாம். 

(பொறுப்பு துறப்பு: இவை ஊட்டச்சத்து நிபுணரால் வழங்கப்பட்ட பொதுவான தகவல்களை கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதனை பின்பற்றும் முன் ஒருவர் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை Zee News உறுதிசெய்யவில்லை)

மேலும் படிக்க | இந்த அஞ்சுல ஏதாச்சும் ஒண்ணு இருந்தாலும் ஹார்ட் அட்டாக் தான்! மாரடைப்பை அலட்சியப்படுத்தாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News