மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 குட் நியூஸ்: அகவிலைப்படி உயர்வு, டிஏ அரியர், தீபாவளி போனஸ்

7th Pay Commission: ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு தீபாவளிக்கு முன்னதாக வெளிவரும் என எமது வட்டாரங்கள் உறுதியாக தெரிவிக்கின்றன. 

7th Pay Commission:அக்டோபர் 16 ஆம் தேதி மோடி அரசின் அடுத்த அமைச்சரவைக் கூட்டம் நடக்கும் என கூறப்படுகின்றது. இதில் அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அறிவிப்பு நாளை வந்தால், அதனால் 49 லட்சம் ஊழியர்கள் மற்றும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் அகவிலைப்படி உயரும். அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்பட்டாலும், அது ஜூலை 2024 முதல் கணக்கிடப்படும். ஆகையால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 2024 முதலான டிஏ அரியர் தொகை கண்டிப்பாக கிடைக்கும். 

1 /11

மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி அடுத்தடுத்து பல நல்ல செய்திகள் வரவுள்ளன. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அவர்களது வங்கிக் கணக்கில் பெரிய அதிகரிப்பு ஏற்படவுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கவுள்ள நல்ல செய்திகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

2 /11

7வது ஊதியக் குழு: ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு தீபாவளிக்கு முன்னதாக வெளிவரும் என எமது வட்டாரங்கள் உறுதியாக தெரிவிக்கின்றன. நவராத்திரியிலேயே அரசு இதை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசு அப்படி செய்யவில்ல. எனினும், தீபாவளிக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளிவந்து, ஊழியர்களின் கணக்கில் தொகையும் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

3 /11

இந்த செய்தி லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) பெரும் நிவாரணமாக வந்துள்ளது. இது பண்டிகைக்கான மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது என்றே கூற வேண்டும், 

4 /11

மத்திய அரசு ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனசுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் டிஏ உயர்வு (DA Hike) மற்றும் டிஏ அரியர் ஆகியவற்றுக்கான அறிவிப்புகளும் வரவுள்ளன. மொத்தத்தில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரே நேரத்தில் 3 நல்ல செய்திகள் கிடைக்கின்றன. 

5 /11

அக்டோபர் 16 ஆம் தேதி மோடி அரசின் அடுத்த அமைச்சரவைக் கூட்டம் நடக்கும் என கூறப்படுகின்றது. இதில் அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அறிவிப்பு நாளை வந்தால், அதனால் 49 லட்சம் ஊழியர்கள் மற்றும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் அகவிலைப்படி உயரும்.

6 /11

ஜனவரி 2024 முதல் ஜூன் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் ஜூலை 2024 -இல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை 3%-4% அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. இதன் பிறகு மொத்த டிஏ (DA) மற்றும் டிஆர் (DR) 53%-54% ஆக அதிகரிக்கும்.

7 /11

சம்பள உயர்வு: ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் (Basic Salary) 18,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அகவிலைப்படி 3% அதிகரித்தால் அவருக்கு சம்பளத்தில் ரூ.540 மாத அதிகரிப்பு இருக்கும். ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும். அகவிலைப்படி 4% அதிகரித்தால், அவரது மாத சம்பளத்தில் 720 ரூபாய் அதிகரிப்பு இருக்கும். ஆண்டு சம்பளம் ரூ.7,440 அதிகரிக்கும்.  

8 /11

சம்பள உயர்வு கணக்கீடு: மாதச் சம்பளம் ரூ.50,000 உள்ள ஊழியர்களுக்கான கணக்கீட்டை காணலாம். அகவிலைப்படி 3% அதிகரித்தால், அவர்களுக்கு மாதா மாதம் சம்பளத்தில் ரூ.1,500 கூடுதலாக வரும். ஆண்டுக்கு இந்த உயர்வு ரூ.18,000 ஆக இருக்கும். இந்த தொகை பல்வேறு லெவல் ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.

9 /11

அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்பட்டாலும், அது ஜூலை 2024 முதல் கணக்கிடப்படும். ஆகையால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 2024 முதலான டிஏ அரியர் தொகை கண்டிப்பாக கிடைக்கும். இதன் மூலம் அவர்களுக்கு அடுத்த மாத சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் காணப்படும். 

10 /11

அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்புக்கு முன்னதாக, மத்திய மோடி அரசு (Modi Government), மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை பரிசாக வழங்கியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2023-24 நிதியாண்டுக்கான உற்பத்தித்திறன் இணைக்கப்படாத போனஸுக்கான (Non-Productivity Linked Bonus) (அட் ஹாக் போனஸ்) அறிவிப்பை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் கீழ், குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவு ஊழியர்களுக்கு 30 நாள் சம்பளத்திற்கு இணையான தொகை போனஸாக கிடைக்கும். 

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.