SBI Customers Alert: வாடிக்கையாளர்களிடமிருந்து எஸ்பிஐ வங்கி அநியாய வசூல்!

நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா குறித்து ஐ.ஐ.டி பாம்பே அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 13, 2021, 11:31 AM IST
SBI Customers Alert: வாடிக்கையாளர்களிடமிருந்து எஸ்பிஐ வங்கி அநியாய வசூல்! title=

நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா குறித்து ஐ.ஐ.டி பாம்பே அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐ.ஐ.டி பாம்பே தனது அறிக்கையில், ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு வைப்பு கணக்குடன் இணைக்கப்பட்ட சேவைகளின் பெயரில் அதிக சேவை கட்டணம் வசூலிப்பதாக கூறியுள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி இந்த கணக்குகளில் வங்கி தேவையற்ற கட்டணங்களை விதித்தது. இந்த வழியில், எஸ்பிஐ கடந்த 5 ஆண்டுகளில் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

ஐ.ஐ.டி பாம்பே (IIT Bombay) ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. வங்கியின் ஆய்வின்படி, எஸ்பிஐ ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு வைத்துள கணக்குகள் தொடர்பான சேவைகளுக்கு அதிக கட்டணம் வசூலித்தது. ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்களைப் புறக்கணித்து, எஸ்பிஐ (SBI) உள்ளிட்ட சில வங்கிகள் கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து அதிக கட்டணம் வசூலித்துள்ளன. ஆய்வின் படி, ஜீரோ பேலன்ஸ் கணக்குகளில் இருந்து நான்கு பரிவர்த்தனைகளுக்குப் பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ .17.70 வசூலிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | Bank Account மூலம் உங்களுக்கு கிடைக்கும் Overdraft வசதியின் முக்கிய அம்சங்கள் இவைதான்

இதனால் 5 ஆண்டுகளில், ஜீரோ பேலன்ஸ் (Zero Balance) கணக்கிலிருந்து அபராதத்தை வசூலிப்பதன் மூலம் மட்டுமே எஸ்பிஐ ரூ .300 கோடியை ஈட்டியுள்ளது. அந்த அறிக்கையின்படி, 2015 முதல் 2020 வரை, 12 கோடி ஜீரோ பேலன்ஸ் கணக்குகளில் இருந்து சுமார் 300 மில்லியன் ரூபாயை எஸ்பிஐ மீட்டுள்ளது.

2018-19க்கு இடையில், இந்த கணக்குகளில் இருந்து ரூ .72 கோடி சேவை கட்டணத்தை எஸ்பிஐ வசூலித்துள்ளது, அதே நேரத்தில் 2019-20ஆம் ஆண்டில் சேவை கட்டணம் என்ற பெயரில் ரூ .158 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ தவிர, பஞ்சாப் நேஷனல் வங்கி ஜீரோ பேலன்ஸ் கணக்குகளில் இருந்து ரூ .9.9 கோடியையும் வசூலித்துள்ளது. ஐ.ஐ.ஐ.டி பம்பே பேராசிரியர் ஆஷிஷ் தாஸ் இந்த ஆய்வை செய்துள்ளார். அந்த அறிக்கையின்படி, பிரதான் மந்திரி ஜன தன் யோஜனாவின் கீழ் திறக்கப்பட்ட கணக்குகளில் இருந்து பணமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் சேவைக்கு எஸ்பிஐ கட்டணம் வசூலித்துள்ளது. வங்கிகள் டிஜிட்டல் கட்டணம் செலுத்த மக்களை ஊக்குவிக்கும் அதே வேளையில், இந்த சேவைக்கு எஸ்பிஐ அதிக கட்டணம் வசூலிக்கிறது என்று ஆஷிஷ் தாஸ் கூறினார்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News