திருப்பதி சென்ற நயன்தாரா விக்னேஷ் சிவன்: இவர்கள் மீது பாய்கிறதா வழக்கு?

திருமணமான அடுத்தநாளே விக்னேஷ்சிவன் - நயன்தாரா புதுமணத்தம்பதிகள் திருப்பதி ஏழுமலையானிடம் ஆசி பெற சென்றனர். அங்கு தரிசனத்திற்கு சென்ற அவர்கள் இருவர் மீது திருப்பதி தேவஸ்தானம் வழக்கு செய்யும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

திருப்பதி பிரமோற்சவ விழா நடைபெறும் மாடவீதியில் செருப்பு அணிந்து செல்ல கூடாது என அறிவிப்பு பலகை இருந்தும் நயன்தாரா விக்னேஷ்சிவன் ஜோடி மற்றும் அவர்களின் புகைப்பட குழுவினர் செருப்பு அணிந்து கொண்டு மாடவீதிகளில் போட்டோ ஷூட் நடத்தினார்கள்.

Trending News