தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை மற்றும் திருச்சி, மதுரை, சேலம், கோவை ஆகிய 5 இடங்களில் ''அம்மா வைஃபை'' வசதியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
கிழக்கு திசை காற்றழுத்தம் தாழ்வு ஏற்பட்ட வேகம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிப்பு: சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட LoveJihad வழக்கில் ஹாதியா மற்றும் ஷபீன் ஜகான திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் எனவும், தனக்கு விருப்பமான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க ஹதியா-வுக்கு உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளத!
வரும் மார்ச் மாதத்திலிருந்து, சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில், ராமேஸ்வரம் – ஓக்கா வாராந்திர விரைவு ரயில்கள் நாமக்கல் வழியாக இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது!
பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு முதல்வருக்கு வந்த மக்கள் வேண்டுகோளின் பேரில் நல்லதங்காள் மற்றும் கரிக்கோயில் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திரந்துவிடப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலை., மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலை., -க்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணைவேந்தர்கள் இன்று தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்!
பெரியார் பல்கலைக்கழகத்தில் பயின்று, நடப்பாண்டில் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களது தேர்வு முடிவுகள் இன்று இணையதளம் மற்றும் குறுந்தகவல் மூலமாக வெளியிடப்பட்டது!
பெரியார் பல்கலைகக்கழக துணை வேந்தர் பதவிக்கான நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட அங்கமுத்து உள்ளிட்டவர்களின் கல்வித் தகுதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், சின்னதிருப்பதி பிரசன்ன வெங்கட்ராமண சுவாமி திருக்கோவிலில் நேற்று ஐந்தாம் சனிகிழமையை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை அடுத்துள்ள சின்னதிருப்பதியில் பிரசன்ன வெங்கட்ராமண சுவாமி திருக்கோவில் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டு பழமையான இக்கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம்.
தமிழக அரசு பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வரும் ஸ்மார்ட் கார்ட்-னில் குடும்பத்தலைவி ஒருவரின் புகைப்படத்திற்கு பதிலாக நடிகையின் புகைப்படம் மாறி இடம்பெற்றுள்ள நிகழ்வு நெட்டிசன்களுக்கு பெரும் தீனியாய் அமைந்துள்ளது.
சேலம், ஓமலூர் தாலுகாவின் ஆர்.சி.செட்டிபட்டி காமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சரோஜா. இவருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கார்டில் சரோஜா படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வால் படம் மாறி இடம்பெற்றுள்ளது.
உடான் திட்டத்தின் கீழ் சேலம், ஓசூர், நெய்வேலிக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவை தொடங்க உள்ளது.
இந்தியாவில் சிறு நகரங்களுக்கு இடையில் குறைந்த கட்டணத்தில் விமான போக்குவரத்தை ஏற்படுத்துவதற்காக உடான் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த உதான் திட்டத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 27-ம் தேதி தொடங்கி வைத்தார்.
2,500 ரூபாய்க்குள்ளான பயணக்கட்டணம் உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட உதான் விமான சேவை திட்டத்திற்கு கடந்தாண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.இந்த உதான் திட்டத்தின்படி தமிழ்நாட்டில் சேலம், ஓசூர், நெய்வேலியில் விமான சேவை தொடங்க மத்திய அரசு தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
சேலம் தனியார் பஸ்ஸில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இரவு 9 மணிக்கு சேலத்தில் இருந்து ஓமலூர் அருகே உள்ள நார்ணம்பாளையத்திற்கு ஒரு தனியார் பஸ் சென்றது. நேற்றிரவு 10 மணிக்கு அந்த பஸ் நார்ணம்பாளையம் சென்றடைந்தது. அப்பொழுது பஸ்சில் இருந்த பயணிகள் இறங்கி சென்றனர்.
ஆனால், சிறுமி பஸ்சுக்குள் வைத்து மணிவண்ணன், முருகன் மற்றும் பெருமாளிடம் உட்பட 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.