ரத்த காயத்துடன் சடங்கு தேவையா? வீரா கழுத்தில் தாலி கட்டியதும் மயங்கிவிழுந்த மாறன்! வீரா சீரியல்!

Veera TV Serial Watch 24th October Episode: சரிந்து விழுந்த மாறன்.. அதிர்ச்சியில் உறைந்த கண்மணி, அடுத்து நடந்தது என்ன? வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 24, 2024, 11:24 AM IST
  • சரிந்து விழுந்த மாறன்...
  • அதிர்ச்சியில் உறைந்த கண்மணி..
  • வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
ரத்த காயத்துடன் சடங்கு தேவையா? வீரா கழுத்தில் தாலி கட்டியதும் மயங்கிவிழுந்த மாறன்! வீரா சீரியல்! title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாறன் கத்தி குத்து காயத்தை மறைத்து கொண்டு கோவிலுக்கு வந்து சேர்ந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, மாறனை பார்த்த வள்ளி சந்தோசப்பட்டு அவனை அழைத்து வந்து வீரா பக்கத்தில் உட்கார வைக்கிறான். கடைசி நொடியிலும் கண்மணி ரத்த காயத்துடன் இந்த சடங்கு தேவையா? இன்னொரு நாளைக்கு நடத்தி கொள்ளலாம் என்று தள்ளி போட முயற்சி செய்ய ராமசந்திரன் மறுப்பு தெரிவிக்கிறார். 

அதன் பிறகு தாலி பிரித்து போடும் சடங்கு நல்லபடியாக நடக்க ஏற்கனவே சொன்னபடி எல்லாரது விருப்பத்துடன் வீரா கழுத்தில் தாலி காட்டுகிறான். பிறகு கருவறையில் ஆசிர்வாதம் வாங்க போன சமயத்தில் மாறன் மயங்கி விழ அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். கண்மணி யார் இப்படி செய்தது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைகிறாள். 

மேலும் படிக்க | மீண்டும் மணமகளாக மணமேடை ஏறும் மாயா! மாயாவை கடத்தியது யார்? சந்தியா ராகம் எபிசோட்!

அதன் பிறகு வள்ளி ஹாஸ்பிடலுக்கு போக வேண்டாம், மாறனுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்ல வீட்டில் வைத்து ட்ரீட்மெண்ட் கொடுக்க முடிவு செய்கின்றனர். வீட்டிற்கு வந்ததும் மாறனுக்கு ட்ரீட்மெண்ட் நடக்க ராமசந்திரன் இதுக்கு தான் இவனை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னு சொன்னேன், இப்போ பாரு யார்கிட்டயோ சண்டைக்கு போய் கத்தியால் குத்து வாங்கிட்டு வந்திருக்கான் என்று சொல்ல வள்ளி இப்போ கூட அவன் மேல உனக்கு பாசம் வராதா என்று திட்ட ராமசந்திரன் வெளியே வந்து விடுகிறார். 

மாறன் கண்டிஷன் சீரியஸாக இருப்பதாக சொல்ல வள்ளி சாமி முன்னாடி நின்று கண்ணீர் விட்டு கலங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வீரா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சிவகார்த்திகேயன் மகளா இது? இணையத்தை தூள்களப்பும் ஆராதனா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News