சாப்பாடு சாப்பிட்ட பிறகு எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாமா?

எலுமிச்சை ஜூஸ் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் சாப்பிட்ட பிறகு வெதுவெதுப்பான நீரில் இந்த எலுமிச்சையை சேர்த்து குடித்தால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, வயிறு தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 18, 2022, 02:02 PM IST
  • எலுமிச்சை நீரின் நன்மைகள்
  • அற்புதமான நன்மைகள்
  • உணவுக்குப் பிறகு எலுமிச்சை நீர் நன்மைகள்
சாப்பாடு சாப்பிட்ட பிறகு எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாமா? title=

சாப்பிட்ட பிறகு எலுமிச்சை ஜூஸ் குடித்தால் என்ன நன்மைகள்: எலுமிச்சை ஜூஸ் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது குடிப்பதற்கு மிகவும் சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. மறுபுறம், பெரும்பாலான மக்கள் காலையில் வெறும் வயிற்றில் தேன் கலந்த எலுமிச்சை ஜூஸ் குடிக்க விரும்புகிறார்கள், ஆனால் நீங்கள் சாப்பிட்ட பிறகு வெதுவெதுப்பான நீரில் இந்த எலுமிச்சை ஜூஸை கலந்து குடித்தால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு இது மிகவும் நன்மை பயக்கும். எலுமிச்சை வைட்டமின் சி இன் சிறந்த மூலமாகும், இது உங்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. எனவே உணவு உண்டவுடன் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

உணவு உண்டவுடன் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் என்ன நன்மைகள் கிடைக்கும்

வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாது
உணவு உண்ண பின் வெந்நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால், அது செரிமானத்திற்கு உதவுகிறது. அதே சமயம், அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் இது தடுக்கிறது. எனவே, உணவு உண்ட பிறகு எலுமிச்சை நீரை உட்கொள்ளலாம்.

மேலும் படிக்க | இள நரை பிரச்சனையா... உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய ‘முக்கிய’ உணவுகள்! 

நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்
சுடு நீர் மற்றும் எலுமிச்சை நீர் கலவையானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இதில் வைட்டமின் சி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது, இது சளி, காய்ச்சலில் இருந்து உங்களைப் பாதுகாக்க உதவுகிறது.

உடலின் நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது
லெமனேட் உங்கள் உடலில் இருந்து நச்சுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் துகள்களை வெளியேற்ற உதவுகிறது. அதனால்தான் தினமும் சாப்பிட்ட பிறகு எலுமிச்சை ஜூஸை கண்டிப்பாக குடிக்க வேண்டும்.

இதயம் ஆரோக்கியமாக இருக்கும்
வழக்கமான உணவுக்கு பின் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால், கெட்ட கொலஸ்ட்ரால் குறைவதுடன், இரத்த அழுத்தமும் கட்டுப்படும். அதுமட்டுமின்றி, தினமும் உணவு உட்கொண்ட பிறகு எலுமிச்சை சாறு குடித்து வந்தால்,மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் வராது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஜீ மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குச்சிக் கிழங்கை இப்படி சாப்பிட்டு பாருங்க! ஒல்லிக் குச்சி உடம்பு கேரண்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News