மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெறுகிறது. முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இன்று தமிழகம் முழுவதும் உழவர் திருநாளாம் அறுவடைத்திருநாள் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற கருத்துக்கு இணையாக தை மாதத்தின் முதல் நாளாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருவிழா நான்கு நாள் கொண்டாட்டப்படுகிறது.
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தின் எதிரொலியாக பொங்கலுக்கான சிறப்பு பேருந்து முன்பதிவு மையத்தின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
பொங்கல் பண்டிகை வருவதையொட்டி தமிழகம் முழுவது சிறப்பு பஸ்கள் இயக்கம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என்று கோரி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போலீசார் தடியடி நடத்தி கைது செய்துள்ளது. இதற்கு திமுகவின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை கண்டித்து பாலமேடு கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாட்டுப் பொங்கல் பூஜைக்காக காளைகளை, அதன் உரிமையாளர்கள் கோயிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடு நடத்தினர். பின்பு ஊர் எல்லையில் இருந்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற காளைகளை, வாடிவாசலில் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விட்டனர். அவற்றை சிலர் அடக்க முயன்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.