நேபாளம் மற்றும் இலங்கையில் கட்சியை விரிவுபடுத்துவதற்கும் இரு நாடுகளில் கட்சியை வலுப்படுத்தற்கும் ஆன அமித் ஷா திட்டமிட்டார் என திரிபுரா முதலமைச்சர் கூறியிருப்பது, பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு போட்டிகள் கொண்ட இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகள் மொட்டெரா ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கின்றன. இதில் 50 சதவீத பார்வையாளர்கள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஜி.சி.ஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், ஜம்மு-காஷ்மீர் மத்திய பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.
மேற்கு வங்காளத்தில் உள்ள தாகூர்நகரில் தேர்தல் பிரசாரத்திற்கான பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கொரோனா தடுப்பூசி போடும் பனி முடிந்தவுடன், சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் ஜோஷிமாத்தில் பனிப்பாறை உடைந்தபின் உத்தரகண்ட்டில் தீவிர எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரை 150 பேரை காணவில்லை. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
விவசாயிகள் போராட்டம் தொடர்ச்சியாக நீடிக்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து அரசு சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என கோரி வருகின்றனர்.
டெல்லியின் புறநகரில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து ட்வீட் செய்ததற்காக ஸ்வீடன் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் மீது டெல்லி காவல்துறை வியாழக்கிழமை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். அந்த சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக லட்சக்கணக்காண விவசாயிகள் தேசிய தலைநகரம் டெல்லி எல்லையில் (Delhi Border) போராட்டம் செய்து வருகின்றனர்.
தலைநகர் தில்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறைகள் மற்றும் செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றி சம்பவம், உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது. நாட்டை அவமானப்படுத்தும் வகையிலான இந்த சம்பவத்திற்குப் பிறகு, செங்கோட்டையில் ஏராளமான பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகளை நலனை கருத்தில் கொள்ளாமல், சுய லாபத்திற்காக, விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட வைக்கின்றனர் என உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
உள்துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா பொங்கல் சமயத்தில் தமிழ்நாடு வர திட்டமிட்டிருந்தார். அவர் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அமித் ஷா (Amit Shah) சென்னை வரவில்லை என்றும் அவரது தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்படுவதாகவும் திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க தேர்தலுக்கான மாஸ்டர் ப்ளானுடன் பாஜக களத்தில் இறங்கியுள்ளது. பல தலைவர்களுக்கு வெவ்வேறு பகுதிகளின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, 7 பேர் கொண்ட சிறப்பு குழு டெல்லியில் இருந்து அனுப்பப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.