மனைவியை தம்புள்ஸால் அடித்துக் கொலை செய்த கணவன்.!

குடும்பப் பிரச்சனை காரணமாக மனைவியை கணவன் உடற்பயிற்சி செய்யும் தம்புள்ஸால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Dayana Rosilin | Last Updated : Jun 28, 2022, 06:37 PM IST
  • மனைவியை தம்புள்ஸால் அடித்து கொலை செய்த கணவன்
  • குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட விபரீத சம்பவம்
  • போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
மனைவியை  தம்புள்ஸால் அடித்துக் கொலை செய்த கணவன்.!  title=

சிவகங்கை மாவட்டம் சூரக்குளம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் மார்க் ஆண்டனி. இவர் கர்நாடக மாநிலத்தில் பணியாற்றி வருகிறார. இந்நிலையில் 3 நாட்கள் விடுமுறைக்காக சிவகங்கை வந்த மார்க் ஆண்டனிக்கும் அவரது மனைவி  கற்பகத்திற்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த மார்க் ஆண்டனி, அருகே இருந்த உடற்பயிற்சி செய்யும் தம்புள்ஸால்  கற்பகத்தின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த கற்பகம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கற்பகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து மார்க் ஆண்டனியை கைது செய்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பப் பிரச்சனை காரணமாக மனைவியை கணவன் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | கிரிப்டோவில் ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லை; காரணத்தை விளக்கும் பில் கேட்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News