TTV தூண்டுதலில் EPS, OPS மீது கொலை முயற்சி - புகார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாளில் TTV.தினகரன் தூண்டுதலின் பேரில் EPS, OPS ஐ கொலை செய்ய முயற்சித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 5, 2021, 06:01 PM IST
TTV தூண்டுதலில் EPS, OPS மீது கொலை முயற்சி - புகார் title=

சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாளில் TTV.தினகரன் தூண்டுதலின் பேரில் EPS, OPS ஐ கொலை செய்ய முயற்சித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று(5/12/21) அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அதிமுகவினர் சென்ற பொழுது ஏற்பட்ட பிரச்சனை குறித்து கழக புரட்சி தலைவி அம்மா பேரவை துணை செயலாளர் மாறன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.  அதில், ஐயா, நான் கழக புரட்சி தலைவி அம்மா பேரவை துணை செயலாளராக கழக பணியாற்றி வருகின்றேன். 

ALSO READ J.Jayalalithaa: மக்களால் நான்.. மக்களுக்காக நான்! செல்வி ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவுநாள்

தமிழக முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு அம்மாவின் 5-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று காலை 10 மணியளவில் அம்மா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்த எங்கள் கழக ஒருங்கிணைப்பாளர்களும், முன்னாள் முதலமைச்சர்களுமான திரு.ஓ.பன்னேர்செல்வம் மற்றும் திரு.எடப்பாடி.k.பழனிசாமி ஆகியோருடன் நான் காமராஜர் சாலையில் உள்ள அம்மா நினைவிடத்திற்கு வந்து மலரஞ்சலி செலுத்த சென்றேன்.  அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும்போது, சுமார் காலை 10:45 மணியளவில் அமமுக பொதுச்செயலாளர் திரு.TTV.தினகரனின் தூண்டுதலின் பேரில் அமமுக பொறுப்பாளர்கள் மற்றும் அடியாட்கள் சட்டவிரோதமாக காமராஜர் சாலையில் MGR நினைவிடத்திற்கு முன்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கையில் பயங்கர ஆயுதங்களுடன் கழக ஒருங்கிணைப்பாளர்களை திட்டமிட்டு கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு, சதித்திட்டதின்படி தாக்குதல் நடத்த காழ்ப்புணர்ச்சியுடனும், வன்மத்துடனும் கழக ஒருங்கிணைப்பாளரின் வாகனத்தை மறித்து முற்றுகையிட்டதோடு, தகாத வார்த்தைகளால் எங்கள் கழக முக்கிய நிர்வாகிகளின் பெயர்களை சொல்லி கூச்சலிட்டு ஆவேசமுடன் முழக்கமிட்டு கொண்டே கற்களையும், காலணிகளையும், காம்புகளையும், கட்டைகளையும் வெறிகொண்டு எங்கள் மீது வீசினர்.

admk

எனவே சட்ட ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்று சதி திட்டம் தீட்டி, பயங்கர ஆயுதங்களுடன் ஒன்று கூடி ஆபாச வார்த்தைகளுடன் ஆவேசமாக கொலை வெறி தாக்குதல் நடத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் TTV.தினகரன் தூண்டுதலில் சாதித்திட்டத்தோடு வன்முறை வெறியாட்டம் நடத்திய TTV.தினகரன்உட்பட 100-க்கும் மேற்பட்ட சமூக விரோதிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டு கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ அரசியல் பழிவாங்குதலுக்காக காவல்துறை பயன்படுத்தபடுகிறது - எடப்பாடி பழனிச்சாமி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News