கொரோனா எதிரொலி: 12-ம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கப்படுமா? பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை

12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்தி வைப்பது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை (School Education Department) தீவிர ஆலோசனை செய்து வருகிறது. மாணவ-மாணவிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் அரசு மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 5, 2021, 04:47 PM IST
  • நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மீண்டும் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகிறது.
  • 12 ஆம் வகுப்பு தேர்வை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை.
  • தமிழகத்தில் மே 3 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.
கொரோனா எதிரொலி: 12-ம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கப்படுமா? பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை title=

சென்னை: நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பல மாநிலங்களில் மீண்டும் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகிறது. அதேநேரத்தில் பள்ளிகள் மூடப்ப்ட்டு உள்ளனர். தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், 12 ஆம் வகுப்பு தேர்வை (12th Class Exam) நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் ஆலோசனை நடத்தி வருகிறார்.  நாளை தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்தி வைப்பது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை (School Education Department) தீவிர ஆலோசனை செய்து வருகிறது. மாணவ-மாணவிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் அரசு மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது. ஒருவேளை 12 ஆம் வகுப்பு தேர்வு ஏற்கனவே அறிவித்தப்படி, அதேநாளில் நடத்த வேண்டும் என்றால், பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியிருக்கும்.  அதற்கான ஏற்பாடுகளை தொடர்ந்து அரசு தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது. 

ALOS READ | School Holiday in Tamil Nadu: மறு உத்தரவு வரும் வரை, 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் (Coronavirus Spread) அதிகரிக்கும் நிலையில்,  மே 3 ஆம் தேதி நடைபெறவுள்ள 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஆனால் இதுக்குறித்து இன்னும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இருந்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை. 

மாணவர்களின் நலன் கருதி +2  மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கவேண்டும் என்றும், தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும்வேளையில் தமிழக அரசு (TN Govt) என்ன முடிவெடுக்கப்போகிறது என மாணவர்கள் மற்றும் பொற்றோர்கள் எதிர்பார்த்து உள்ளானர்.
 
பல மாநிலங்களில் ஊரடங்கு (Lockdown) உத்தரவு மீண்டும் போடப்பட்டுள்ளது. ஏற்கனவே 9, 10, 11 ஆகிய வகுப்புகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் 9, 10 ,11 ஆகிய வகுப்புகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் (Online Class) தொடர்ந்து நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ALOS READ | TN Board Exam 2021: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்க வாய்ப்பு எனத் தகவல்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News