ஆஸ்திரேலிய ஓபன்: ''காலிறுதிக்கு முந்தையச் சுற்று''-க்கு முன்னேறிய பயஸ் அணி!!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பயஸ் இணை அணி காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

Last Updated : Jan 20, 2018, 02:35 PM IST
ஆஸ்திரேலிய ஓபன்: ''காலிறுதிக்கு முந்தையச் சுற்று''-க்கு முன்னேறிய பயஸ் அணி!! title=

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பயஸ் இணை அணி காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம்  அடுத்த சுற்றில் கொலம்பியாவைச் சேர்ந்த ஜூவான் செபாஸ்டியன் கேபல் மற்றும் ராபர்ட் ஃபரா இணையை எதிர்கொள்ளும் திறன் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவானது இன்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் மூத்த வீரர் லியாண்டர் பயஸ், சக வீரர் புரவ் ராஜாவுடன் இணைந்து களமிறங்கியிருக்கிறார். அவர்களை, இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேமி முரே, பிரேசிலைச் சேர்ந்த புருனோ ஸோரஸ் இணையை எதிர்கொண்டது.

அப்போது நடைபெற்ற போட்டியில், முதல் செட்டை பயஸ் இணை 7-6 (3) என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்த செட்டை முரே-புருனே இணை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, இருதரப்புக்கும்  இடையே வெற்றியை நிர்ணயிக்கும் இறுதிச்சுற்றில் கடுமையான போட்டி நிலவியது.

இந்நிலையில்,நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் பயஸ் இணை அந்த செட்டை 7-6 (6) என்ற கணக்கில் டைபிரேக்கரில் கைப்பற்றியது. அத்துடன் 7-6 (3), 5-7, 7-6 (6) என்ற கணக்கில் பயஸ் இணைக்கு வெற்றி வசமானது.

இந்த வெற்றியின் மூலம் பயஸ் இணை அணி காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம்  அடுத்த சுற்றில் கொலம்பியாவைச் சேர்ந்த ஜூவான் செபாஸ்டியன் கேபல் மற்றும் ராபர்ட் ஃபரா இணையை எதிர்கொள்கிறது.

Trending News