ஓங்கி அறைந்த மணப்பெண்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

மணமேடையில் தன்னை தூக்கிய வாலிபரை ஓங்கி அறைந்த மணப்பெண் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 4, 2018, 11:25 PM IST
ஓங்கி அறைந்த மணப்பெண்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ title=

மணமேடையில் மணப்பெண் யாரையாவது ஓங்கி அறைந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்களா? அப்படி ஒரு சம்பவம் தான் நடைபெற்றுள்ளது. பொதுவாக திருமணம்  என்றாலே எல்லா பிரச்சனையையும் மறந்து குடும்பம் மற்றும் நண்பர்கள் என மகிழ்ச்சியாக இருக்கும் தருணம். அதாவது திருமண நிகழ்ச்சி என்றாலே, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஒரே குதுகலமாக இருக்கும். 

குறிப்பாக வட மாநிலங்களில் மணமக்கள் ஒருவரையொருவர் மாலை மாற்றிக்கொள்ள வெட்கப்பட்டு அமைதியாகவே நின்று கொண்டு இருப்பார்கள். அப்பொழுது அவர்களின் அருகில் இருக்கும் நண்பர்கள், அண்ணன், தம்பி என இவர்களில் ஒருவர் மணப்பெண் மற்றும் மணமகனை தூக்கி கொண்டு ஒருவரையொருவர் மாலை மாற்றிக்கொள்ளுங்கள் எனக் கூறுவார்கள். அப்பொழுது அவர்கள் மாலையை மாற்றிக் கொள்வது வழக்கம்.

அப்படி ஒரு சம்பவம் நடைபெற்ற போது தான் தன்னை தூக்கிய ஒருவரை ஓங்கி கன்னத்தில் அறைந்தார். எதற்காக அவரை மணப்பெண் அறைந்தார். அப்படி என்ன திருமணத்தில் நடந்தது. தன்னை(மணப்பெண்) தூக்கியதும் மாலை பரிமாறிக் கொண்ட பிறகு, ஏன் அவரை அறைந்தார்? இவை அனைத்து கேள்விகளுக்கும் விசை கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பாருங்கள்.

வீடியோ:- 

Trending News