சிவராத்திரிக்கு முன்... இந்த 3 ராசிகளின் கைகளில் பணம் வந்து குவியும்!

Mangal Margi 2025: செவ்வாய் பகவான் வரும் பிப். 24ஆம் தேதி வக்ர நிலையில் இருந்து மாற்றமடைவதால், இந்த 3 ராசியினரின் கைகளுக்கு திடீர் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

செவ்வாய் பகவான் (Mars 2025) தற்போது வக்ர நிலையில் இருக்கும் நிலையில், நேர் திசைக்கு வரும் பிப். 24ஆம் தேதி மாற்றம் அடைகிறார். செவ்வாய் பகவான் மாற்றமடைவது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

1 /8

ஜோதிடத்தின்படி, செவ்வாய் பகவான் கிரகங்களின் தளபதியாக அறியப்படுகிறது. அதாவது, தைரியம், கோபம், சொத்து, நிலம், வீரம் சார்ந்த அனைத்திற்கும் செவ்வாய்  பகவான்தான் பொறுப்பு ஆவார். 

2 /8

செவ்வாய் பகவான் அடிக்கடி ராசிகளை மாற்றுவார். இவர் வெவ்வேறு ராசிகளுக்கு பெயர்ச்சி ஆவது அனைத்து ராசியினர் மீதும் தாக்கத்தை செலுத்தும். சிலருக்கு பெரிய லாபம் உண்டாகும், சிலருக்கு பெரிய நஷ்டம் ஏற்படும்.

3 /8

இந்த பிப்ரவரி மாதம் மகா சிவராத்திரி வர இருக்கிறது. இந்த மகா சிவராத்திரிக்கு இரண்டு நாள்களுக்கு முன் தன் நிலையை மாற்றுகிறார். அதாவது, பிப். 24ஆம் தேதி செவ்வாய் வக்ர நிலையில் இருந்து நேர் திசைக்கு மாறுகிறார். இதனால், இந்த நிலை மாற்றத்தாலும் சிலரின் வாழ்க்கை மொத்தமாக மாறும். பண பலனும் அதிகரிக்கும்.

4 /8

அந்த வகையில், செவ்வாய் கிரகத்தின் நிலை மாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த 3 ராசிகள் எவை என்பதை இங்கு விரைவாக காணலாம்.

5 /8

துலாம்: பிப். 24ஆம் தேதி செவ்வாய் பகவான் தனது நிலையை மாற்ற உள்ளார். இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு பழைய நோய்கள் அல்லது பழைய உடல்நலப் பிரச்னைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பணி தொடர்பாக நீண்ட தூரம் பயணிப்பீர்கள். வீட்டில் சுப காரியம் நடைபெறும். 

6 /8

சிம்மம்: செவ்வாய் பகவான் பிப். 24ஆம் தேதி நிலையை மாற்றுவதால் சிம்ம ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்களின் வருமானம் ஒவ்வொரு நாளும் உயரும். புதிய நிலம் வாங்குவதற்கான முன்பணத்தை நீங்கள் செலுத்த வாய்ப்புள்ளது, புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பும் உள்ளது. நீண்ட நாளாக வராமல் இருந்த பணம் உங்களிக்கு கிடைக்கும், அது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.

7 /8

மிதுனம்: செவ்வாய் பகவான் நிலையை மாற்றிக்கொள்வதால் மிதுன ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகமாகும். துணிச்சலும், வீரமும் அதிகரிக்கும். நீண்ட நாள்களாக தள்ளிப்போட்டு வந்த விஷயங்களை இந்த நேரத்தில் சிறப்பான முறையில் தொடங்குவீர்கள். பல்வேறு வீதங்களில் உங்களுக்கு வருமானம் வரும். சமூகத்தில் மதிப்பும் அதிகரிக்கும். 

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்ட அனைத்தும் பொதுவான கருத்துக்கள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.