Kalaingar Magalir Urimai Thogai | தமிழ்நாடு அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயை இரட்டிப்பாக்க ஒரு சூப்பர் திட்டம் உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை (Kalaingar Magalir Urimai Thogai) எந்த வங்கியில் சேமித்தால் அதிக வட்டி கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசு இந்தியாவிலேயே முன்னோடியாக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயனாளிகளாக இருக்கின்றனர். அவர்கள் மாதம் வாங்கும் ஆயிரம் ரூபாய் தொகையை ஒரு வங்கியில் மட்டும் சேமித்தால் கூடுதல் வட்டி கிடைக்கும். இதன் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை இரட்டிப்பாக்கலாம்.
பெண்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை அப்படியே சேமிக்க மலையரசி தொடர் வைப்புத் திட்டத்தில் சேர வேண்டும். இந்த திட்டத்தில் சேருபவர்களுக்கு சேமிக்கும் பணத்துக்கு 7.5 விழுக்காடு வரை வட்டி வழங்கப்படுகிறது.
வங்கிகளில் பொதுவாக மிக குறைந்த வட்டி மட்டுமே வழங்கப்படும் நிலையில் மாதம் பெறும் ஆயிரம் ரூபாய் தொகையை நீலகிரியில் தொடங்கப்பட்டுள்ள மலையரசி தொடர் வைப்புத் திட்டத்தில் சேர்ந்தால் உங்கள் பணம் குறிப்பிட்ட ஆண்டுகளில் இரட்டிப்பாகும். அத்துடன் முதலீடு பணத்துக்கும் உத்தரவாதம் முழுமையாக உள்ளது.
நீலகிரி மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே மகளிர் உரிமைத் தொகை வாங்கும் பெண்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்வது குறித்து பரிசீலிப்பது உங்களின் எதிர்காலத்துக்கு சிறந்தது.
அதேபோல் இதுவரை மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்காதவர்கள் முடிந்தளவுக்கு சீக்கிரம் விண்ணப்பிக்கவும். ஏனென்றால் தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரைவில் விரிவாக்கம் செய்ய உள்ளது.
இந்த நேரத்தில் இந்த திட்டத்தில் இணைந்தால் உங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். எப்படி விண்ணப்பிப்பது என்ற யோசனை இருந்தால் அருகில் இருக்கும் இசேவை மையங்களுக்கு செல்லுங்கள். ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, புகைப்படம் எல்லாம் எடுத்துச் செல்லுங்கள்.
அங்கு உங்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்து கொடுப்பார்கள். அதிகபட்சம் இன்னும் மூன்று மாதங்களில் புதிய பெண் பயனாளிகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்.
இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இது தொடர்பான குட் நியூஸ் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.