ஐபிஎல் 2024ல் இருந்து விலகும் க்ளென் மேக்ஸ்வெல்! அதுவும் இந்த காரணத்திற்காகவா?

க்ளென் மேக்ஸ்வெல் 6 போட்டிகளில் 3 டக் அவுட் ஆனா பிறகு ஐபிஎல்லில் இருந்து சிறிது போட்டிகள் ஓய்வெடுக்க போவதாக அறிவித்துள்ளார்.

 

1 /5

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முக்கிய வீரரான கிளென் மேக்ஸ்வெல் மன மற்றும் உடல் சோர்வு காரணமாக ஐபிஎல் 2024ல் இருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார்.  

2 /5

திங்கள்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தோல்விக்கு பிறகு பேசிய மேக்ஸ்வெல் இந்த முடிவை தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டியில் மேக்ஸ்வெல் விளையாடவில்லை.  

3 /5

"என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில், இது மிகவும் எளிதான முடிவு. கடைசி ஆட்டத்திற்குப் பிறகு நான் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் பயிற்சியாளர்களிடம் இது குறித்து பேசினேன். ஓய்வு எடுக்க இது எனக்கு சிறந்த நேரம்" என்று மேக்ஸ்வெல் கூறினார்.  

4 /5

க்ளென் மேக்ஸ்வெல் இந்த சீசனில் சிஎஸ்கேக்கு எதிராக டக் அவுட், பிபிகேஎஸ் அணிக்கு எதிராக 5 பந்துகளில் 3 ரன்கள், கொல்கத்தா அணிக்கு எதிராக 19 பந்துகளில் 28 ரன்கள், லக்னோக்கு எதிராக 2 பந்துகளில் மீண்டும் டக், ராஜஸ்தான் அணிக்கு எதிராக 3 பந்துகளில் 1 ரன், மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக டக் அவுட் ஆனார்.  

5 /5

இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியில் கடைசி இடத்தில் உள்ளது.