தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக அந்த பகுதிகளில் வரும் பிப்ரவரி 3, 4, 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

1 /6

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் டிசம்பர் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது அகால மறைவால் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

2 /6

அதனை தொடர்ந்து வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஈரோடு தொகுதியில் கடும் போட்டி இருக்கும் எதிர்பார்க்கப்பட்டது.

3 /6

ஆனால் அதிமுக, பாஜக மற்றும் தேமுதிக போன்ற முக்கிய அரசியல் கட்சிகள் வரவிருக்கும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன. இதனால் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே போட்டி நிலவுகிறது. இந்த 2 கட்சிகளை தவிர 46 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

4 /6

அனைவரும் வாக்களிக்கும் விதமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

5 /6

இந்நிலையில் தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

6 /6

அந்த வகையில் பிப்ரவரி 3 முதல் 5 வரையிலும், பிப்ரவரி 8ம் தேதி வரையிலும் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார். தடையை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.