ஏஐ செய்யப்போகும் உலகமகா பிரச்சனைகள்..!

செயற்கை தொழில்நுட்ப உலகில் தொழில்நுட்பம் அடியெடுத்து வைத்துவிட்ட நிலையில் ஏஐ ஏற்படுத்தபோகும் பிரச்சனைகள் குறித்து பார்க்கலாம்

 

1 /9

ஏற்கனவே இணைய உலகில் பல்வேறு பிரச்சனைகள் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது ஏஐ உலகில் அடியெடுத்து வைத்திருக்கிறது தொழில்நுட்ப உலகம். இதுகுறித்து பேசிய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஏஐ நிச்சயம் பல பிரச்சனைகளை ஏற்படுத்தப்போகிறது என எச்சரித்துள்ளனர்.  

2 /9

சைபர் குற்றங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் 2024-ல் ஏஐ தொழில்நுட்பத்தால் பெரிய ஆபத்து ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது. 

3 /9

பொருளாதார ரீதியான சரிவு, போர் மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றின் வரிசையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பரப்பப்படும் தவறான தகவல்களால் பெரிய பாதிப்பை உலகம் எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.   

4 /9

இதுவரை நாம் எதிர்கொள்ளாத வகையில் இந்த ஆண்டு தொழில்நுட்பத்தால் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் எனக் கூறுகின்றனர். அடுத்த சகாப்தங்களில் உலக அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் போன்றவற்றால் பெரும் தாக்கம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.   

5 /9

சைபர் குற்றங்களை சிறப்பாக பராமரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால் நிறுவனங்கள் சைபர் குற்றங்களுக்கு உள்ளாகி பெரும் சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

6 /9

இதனால் உலக அளவில் இணைய சமத்துவமிண்மை அதிகரித்துள்ளதால், அதை முறையாக நிர்வகிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் WEF அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக எஐ மற்றும் ஜெனரேட்டிவ் AI போன்ற தொழில்நுட்பங்கள் பெரும் அச்சுறுத்தல்களாக மாறும்.   

7 /9

இதன் வளர்ச்சியால் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தேர்தல் செயல்முறைகளில் கூட நேர்மை இல்லாமல் போவதற்கு வாய்ப்புள்ளது.   

8 /9

அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் மாறிவரும் அரசியல் மற்றும் பொருளாதாரம் காரணமாக, டிஜிட்டல் சாம்ராஜ்யம் பெரும் அளவில் உயர்ந்து வருவதால், இது உலகிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.   

9 /9

எனவே 2024 ஆம் ஆண்டில் AI துறையின் வளர்ச்சியால், உலகில் பெரும் ஆபத்துகளும், தாக்கங்களும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.